சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   130
Zoom In NormalZoom Out

லப் பெண்ணென் பாளோர் கிளரொளி மடந்தை தன்னை
ஆவியு ளடக்கிப் பின்னை யமரர்க்கு மரிய னானான்.
 
561.எங்கள்கோ னவன்க ணின்று மிக்குயர் குலத்து வேந்தர்
தங்களோர் புறஞ்சொல் வாராத் தன்மையா லுலகங் காத்தார்
அங்கவர் வழிக்கட் டோன்றி யகலிடம் வணங்க நின்ற
இங்கிவன் பெருமை நீயு மறிதியா லேந்த லென்றான்.
 
562.குடித்தொடர் இரண்டுங் கேட்டே குறுமயி ரெறிந்து கண்ணுள்
பொடித்தநீர்த் திவலை சிந்தப் புகழ்ந்தன ரிருந்த வேந்தர்
அடுத்தெரி யலர்ந்த செம்பொ னணிமணி முடியி னானங்
கெடுத்துரை கொடாத முன்னங் கேசர னிதனைச் சொன்னான்.
 
563.இப்படித் தாயிற் பண்டை யிசைந்தது சுற்ற மென்னை
அப்படி யரிய செய்த வடிகளெம் மரச னாய
கைப்புடை யிலங்கு செவ்வேற் கச்சற்கு மருக னாரென்
றொப்புடைப் புராண நன்னூ லுரைப்பக்கேட் டறிவெ
                                     னென்றான்.
 
564.மன்னவன் மனத்தி னாற்றம் மிறைவனை வணங்கி வாழ்த்திப்
பின்னவன் றன்னை நோக்கிப் பேசினன் பிறங்கு தாரோய்
முன்னிய வுலக நூலுங் குலங்களு முறையு முள்ளிட்
டின்னவா றறியு நீரா ரில்லைநின் போல வென்றான்.
 
565.மந்திரக் கிழவர் கண்ணா மக்கடன் றாள்க ளாகச்
சுந்தர வயிரத் திண்டோ டோழராச் செவிக ளொற்றா
அந்தர வுணர்வு நூலா வரசெனு முருவு கொண்ட
வெந்திர மிதற்கு வாயாத் தூதுவ ரியற்றப் பட்டார்.