சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   136
Zoom In NormalZoom Out

த வண்ணமும்
புரிந்து தொல்குலம் புகன்ற பெற்றியும்
அருந்த கைத்தொடர் பமைந்த வாக்கமும்.
 
590.பின்னை மன்னவன் பேணி நன்மொழி
சொன்ன வண்ணமுஞ் சுற்ற மாயதும்
பொன்ன கைக்குலம் பொலிந்து கண்கொள
இன்ன கைச்சிறப் பருளி யீந்ததும்.
 
591.அருங்க லக்குழாத் தரசன் றேவிமார்
பெருங்கு லத்தவர் பெயர்ந்து கண்டதும்
ஒருங்கு மற்றுளோ ருரைத்த வார்த்தையும்
சுருங்கில் கேள்வியான் றொழுது சொல்லினான்.
 
592.சொன்ன வார்த்தையிஃ திருக்கச் சொல்லுவ
தின்ன மொன்றுள தடிகள் யான்பல
மன்னர் தங்களை மகிழ்ந்து கண்டனன்
அன்ன நீர்மையா ரரச ரில்லையே.
 
593.கற்ற நூல்பிறர் கற்ற நூலெலா
முற்ற நோக்கினு முற்ற நோக்கல
உற்ற நூலெலா முற்ற நூல்களாப்
பெற்ற நூலவன் பெற்றி வண்ணமே.
 
594.எரியு மாணையாற் குளிரு மீகையாற்
பெரியன் மாண்பினாற் சிறிய னன்பினால்
அரியன் வேந்தர்கட் கெளியன் மாந்தர்கட்
குரிய னோங்குதற் கோடை யானையான்.