சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   137
Zoom In NormalZoom Out

595.எல்லை நீருல கினிது கண்பட
வெல்லும் வேலவன் விளங்கு தண்ணளி
இல்லை யேலுல கில்லை யாமென
நல்ல னேயவ னாம வேலினாய்.
 
596.கற்ற நூலினர் கலந்த காதலால்
உற்ற போழ்துயிர் கொடுக்கு மாற்றலார்
கொற்ற வேலவன் குடையி னீழலார்
சுற்ற மாண்பிது சுடரும் வேலினாய்.
 
597.கோதி லாதவர் மக்கண் மக்கண்மற்
றேதி லாரென வியைந்த தீமையில்
ஆத லாற்றமர் பிறர்க ளாவதங்
கோதி னாரவர்க் குள்ள தில்லையே.
 
598.வைய மின்புறின் தானு மின்புறும்
வெய்ய தொன்றுறிற் றானும் வெய்துறுஞ்
செய்ய கோலினாய் செப்ப லாவதவன்
றைய தாரினா னருளின் வண்ணமே,
 
599.வீவில் வீங்குநீர் வேலி வாழ்பவர்க்
காவி யாபவ ரரச ராதலாற்
காவ லோவுங்கொல் லென்று கண்படான்
மாவ றானையம் மன்னர் மன்னனே.
 
600.மங்குல் மாமழை மாரி வண்கையான்
பொங்கு காதலம் புதல்வர் தாமவர்
இங்கண் வேந்தர்கட் கேனை மான்கண்முன்
சிங்க வேறெனச் செப்பு நீரரே.
 
601.கைய வாச்சிலைக் காம னிங்கிரு
மெய்யி னால்வெளிப் பட்ட நீரதால்
வைய மாள்பவன் புதல்வர் வார்கழல்
ஐயன் மார்கடம் மழகி