சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   138
Zoom In NormalZoom Out

ன் வண்ணமே.
 
602.சங்க வண்ணனுக் கிளைய தம்பிதான்
பொங்கு நீர்முகில் புரையு மேனியன்
அங்க ணிவ்வுல காள நாட்டிய
மங்க லப்பொறி மன்ன காண்டியால்.
 
603.செங்கண் மாவலன் தெய்வ மார்பகம்
பங்க யத்துமேற் பாவை தன்னுடன்
நங்கு லக்கொடி நங்கை சேர்வதற்
கிங்கண் மாதவ மெவன்கொல் செய்ததே.
 
604.நங்கை மற்றவற் கல்ல தொப்பிலள்
இங்கி வட்கலா லேந்த லில்லவன்
பொங்கு புண்ணியம் புணர்த்த வாறிது
வெங்கண் யானையாய் வியக்கு நீரதே.
 
605.என்று கூறலு மேந்து நீண்முடி
வென்றி நீள்புகழ் வேக யானையான்
அன்று மற்றவற் கருளி யீந்தனன்
நின்று மின்சுடர் நிதியி னீத்தமே.
 
606.மற்ற வன்றனை மனைபு கப்பணித்
துற்ற மந்திரத் தவர்க ளோடிருந்
தெற்று நாமினிச் செய்வ தென்றனன்
வெற்றி நீள்குடை வேந்தர் வேந்தனே.
 
607.செங்க ணீண்முடிச் செல்வ சென்றொரு
திங்க ணாளினுட் டிவிட்ட னாங்கொரு
சிங்கம் வாய்பகத் தெறுவ