சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   139
Zoom In NormalZoom Out

னென்பது
தங்கு கேள்வியான் றான்முன் சொன்னதே.
 
608.ஆத லாலதற் கைய மில்லையால்
ஓது மாண்பினா னொருவ னொற்றனாய்த்
தீதி றானையாய் செல்ல வைப்பதே
நீதி யாமென நிகழ்த்தி னாரரோ.
 
609.உய்த்து ணர்ந்தவ ருரைத்த நீதிமேல்
வைத்த வொற்றினன் மன்ன னானபின்
அத்தி றத்தினே யமர்ந்த சிந்தையன்
ஒத்த சுற்றமோ டுவகை யெய்தினான்.
 
610.இத்தி சைக்கணிவ் வாறிது செல்லுநாள்
அத்தி சைக்கணஞ் சப்படு மாழியாண்
னெத்தி சைக்கும்வெய் யோனியன் முன்னுற
வைத்தி சைத்தன மற்றது கூறுவாம்.
 
611.பஞ்சி மேன்மிதிக் கிற்பனிக் குந்தகை
அஞ்சி லோதிய ரம்முலை நாஞ்சிலா
மஞ்சு தோய்வரை மார்ப மடுத்துழத்
துஞ்ச லோவுந் தொழிலின னாயினான்.
 
612.முத்த வாணகை மொய்பவ ளத்துணி
ஒத்த வாயமு தொண்கடி கைத்திரள்
வைத்த வாயின னாய்மட வார்கடஞ்
சித்த வாரிக ளுட்சென்று தங்கினான்.
 
613.ஆரந் தங்கிய மார்பனு மந்தளிர்க்
காருண் கொம்பனை யாருங்