| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 141 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| மஞ்ஞை துதைந்தசெய் குன்றமும் பாவும் வெண்மண லும்புனற் பட்டமு மேவு நீர்மைய னாய்விளை யாடினான். | |
| 619. | மின்னுஞ் செங்கதிர் மண்டிலம் வெய்தொளி துன்னுந் திங்கட் பனிச்சுடர் தண்ணிது என்னு மித்துணை யும்மறி யான்களித் தன்ன னாயின னச்சுவ கண்டனே. |
| 620. | சீறிற் றேர்ந்துணர் வின்றிச் செகுத்திடு் மாறுண் டென்பதொர் மாற்றம் பொறான்மனந் தேறின் யாரையும் தேறுஞ் செருக்கொடிவ் வாறு சென்றத வற்கர சென்பவே. |
| 621. | தோடு மல்கு சுரும்பணி கோதையார் கோடி மென்றுகிற் குய்யத் தடம்படிந் தாடித் தன்னணை யாமையிற் பூமகள் ஊட லுற்றிடம் பார்த்துள ளாயினாள். |
| 622. |
ஆங்கொர் நாளிறை பெற்றறி வின்கடல் தாங்கி னான்சத விந்துவென் பானுளன் நீங்க லாப்புக ழான்றன் னிமித்திகன் வீங்கு வெல்கழ லாற்கு விளம்பினான். |
| 623. |
மன்ன கேள்வளை மேய்திரை மண்டிலந் தன்னை யாள்பவர்க் கோதின தங்கணே பன்னி னாறு பகைக்குல மாமவை முன்னம் வெல் |