சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   142
Zoom In NormalZoom Out

கவென் றான்முகம் நோக்கினான்.
 
624. தன்னை வென்றதண் டார்வய வேந்தனைப்
பின்னை வென்றி பெறற்கரி தாதலான்
மன்னி மற்றிவ னாண்டிடும் வரைப்பகம்
பொன்னின் மாரி பொழிந்திட நின்றதே.
 
625.மாசி றண்டன்ன தோண்மன்ன மன்னிய
கோசி றண்டத்த னாய்விடிற் கொற்றவன்
ஏசி றண்டம் பரவவிவ் வையகம்
ஆசி றண்டத்த னாயினி தாளுமே.
 
626.பெற்ற தன்முத லாப்பின் பெறாததும்
சுற்றி வந்தடை யும்படி சூழ்ந்துசென்
றுற்ற வான்பொருள் காத்துயரீகையுங்
கற்ற வன்பிறர் காவல னாகுவான்.
 
627.அருக்கன் றன்னறி வாக வலர்ந்தநீர்த்
திருக்க வின்றசெல் வச்செழுந் தாமரை
செருக்கெ னப்படுந் திண்பனி வீழுமேல்
முருக்கு மற்றத னைமுகைத் தாரினாய்.
 
628. இகழ்ச்சி யிற்கெடு வார்களை யெண்ணுக
மகிழ்ச்சி யின்மன மைந்துறும் போழ்தெனப்
புகழ்ச்சி நூலுட் புகன்றனர் பூவினுட்
டிகழ்ச்சி சென்றசெம் பொன்முடி