சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   143
Zoom In NormalZoom Out

மன்னனே.
 
629.நெறியி னீதிக்க ணேரிவை யொப்பவும்
அறிதி நீயவை நிற்கவ ழன்றுநீ
செறுதி யேனுஞ்செம் பொன்முடி மன்னவோர்
உறுதி யானுரைப் பானுறு கின்றதே.
 
630. என்ற லும்மிணர் வேய்முடி மாலையான்
நன்று சொல்லுக வென்று நகைமணிக்
குன்ற மன்னதிண் டோன்மிசைக் குண்டலஞ்
சென்று மின்சொரி யச்செவி தாழ்த்தினான்.
 
631. பூமி மேற்புரி சைமதிற் போதன
நாம நன்னக ராளு நகைமலர்த்
தாம நீண்முடி யான்றன் புதல்வர்கள்
காம வேளனை யாருளர் காண்டியால்.
 
632. ஏந்து தோளவ ருள்ளிளை யானினக்
காய்ந்த தொல்பகை யாகுமென் றேயுறப்
போந்தொர் புன்னிமித் தம்புறப் பட்டது
வேந்த யான்மனத் தின்மெலி கின்றதே,
 
633.முத்த நீண்முடி யாய்முன்ன மற்றதற்
கொத்த வாறுணர்ந் தீயென வென்செயும்
மைத்த கைமனத் தான்மனித் தன்னெனக்
கைத்த லங்கதிர் வீச மறித்தனன்.
 
634.மிகையின் வந்தவிச் சாதர