சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   144
Zoom In NormalZoom Out

 வேந்தர்தம்
தொகையை வென்றவென் றோளுள வாப்பிற
பகையி னிப்படர்ந் தென்செயு மென்றனன்
நகைகொ ணீண்முடி நச்சர வம்மனான்.
 
635.மாசி லாலவட் டத்தெழு மாருதம்
வீச விண்டொடு மேருத் துளங்குமோ
பேசின் மானிடப் பேதைக ளாற்றலால்
ஆசி றோளிவை தாமசை வெய்துமோ.
 
636.வேழத் தின்மருப் புத்தடம் வீறுவ
வாழைத் தண்டினு ளூன்ற மழுங்குமோ
ஆழித் தானவர் தானையை யட்டவென்
பாழித் தோள்மனித் தர்க்குப் பணியுமோ.
 
637.வேக மாருதம் வீசவிண் பாற்சிறு
மேக சாலம் விரிந்தெதிர் செல்லுமோ
ஏக மாயவென் சீற்றமஞ் சாதெதி
ராக மானிடர் தாமசை கிற்பவோ.
 
638.குலிச மிந்திரன் கொண்டு பணிக்குமேல்
மலையின் மாசிக ரங்களும் வீழ்த்திடும்
நிலைய வெஞ்சுட ராழி நினைப்பனேற்
றொலைவில் வானவர் தோளுந் துணிக்குமே.
 
639. விச்சை மற்றவர் தம்மை விடுப்பதோர்
இச்சை யென்கணுண் டாமெனின் யாவரே
அச்ச மின்றிநிற் பாரந் நிமித்த நூல்
பொச்ச லாங்கொல் புலந்தெழு நீர்மையாய்.
 
640.புலவர் சொல்வழி போற்றில னென்பதோர்
அலகில்