| சூளாமணி மாலை |
| உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள் |
![]() | ஓலை எண் : 145 | ![]() |
| Zoom In | Normal | Zoom Out | |
![]() |
|
|
| புன்சொலுக் கஞ்சுவ னல்லதேல் உலக மொப்ப வுடன்றெழு மாயினும் மலைவன் மற்றதன் கண்மதிப் பில்லையே. | |
| 641. |
ஆத லாலதற் கேற்ற தமைச்சர்கள் ஓதி யாங்குணர்ந் தீகவென் றொட்டினான் யாதுந் தன்கணல் லார்செயற் கேன்றதோர் ஏத முண்டெனு மெண்ணமில் லாதவன். |
| 642. |
அலங்க லாழியி னானது கூறலும் கலங்கு நூற்கரு மத்தொழின் மாக்கடாம் புலன்கொள் சூழ்ச்சிய ராகிப் புகன்றனர் உலங்கொள் தோளவ னுக்குணர் வாயினார். |
| 643. |
எரியுந் தீத்திர ளெட்டுணை யாயினுங் கரியச் சுட்டிடுங் காந்திக் கனலுமேற் றெரியிற் றொல்பகை தான்சிறி தாயினும் விரியப் பெற்றிடின் வென்றடு கிற்குமே. |
| 644. | முட்கொ ணச்சு மரமுளை யாகவே உட்கி நீக்கி னுகிரினும் நீக்கலாம் வட்கி நீண்டதற் பின்மழுத் தள்ளினும் கட்கொ டாமன்ன யார்களை கிற்பவே. |
| 645. | சிறிய வென்றிக ழார்பகை சென்றுசென் றறிய லாவவன் றாலணி மாமலர் வெறியும் வேரியும் விம்மி விரிந்துதேன் செறியுந் தொங்கற்செம் பொன்முடி மன்னனே. |