சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   147
Zoom In NormalZoom Out

 தூதுவர் தாந்திறை கொள்கென
வென்றி வேலவன் மேல்விடை யேயினான்.
 
650. ஊட்ட ரக்குண்ட கோலரொண் கோலத்தர்
ஓட்ட ரும்பொறி யொற்றிய வோலையர்
நாட்டி யம்முணர் வாரொரு நால்வர்சேண்
மோட்டே ழின்முகில் சூழ்நெறி முன்னினார்.
 
651. தீதறு தென்மலை மாதிர முன்னுபு
தூதுவர் சூழ்சுடர் சூடிய சூளி்கை
ஓதின ரோதி யுலப்பற வோங்கிய
போதன மாநகர் புக்கன ரன்றே.
 
652.செஞ்சுடர் மின்னொளி சென்றுதி ளைத்திட
மஞ்சொடு வைகிய மாமணி மாளிகை
வெஞ்சுடர் வீதி விலக்குவ கண்டுதம்
விஞ்சையர் செல்வம் வெறுத்தன ரன்றே.
 
653. மூரிமு ழாவொலி விம்மி முரன்றெழு
காரிமி ழார்கலி யான்மயி லாலுவ
சோரிமு ழாவிழ விற்றெரு துற்றபின்
சீரிமி ழாற்பொலி வெய்தினர் சென்றே.
 
654. சூளிகை சூடிய சூல விலைத்தலை
மாளிகை மேன்மழை மாமுகில் போழ்தலின்
நீளிய நீரரு வித்திரள் வீழ்வன
காளைக டாதை நகர்ப்பல கண்டார்.