சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   148
Zoom In NormalZoom Out

655. கூடுநர் கோவை மணிக்கலை யுக்கவும்
ஊடினர் சிந்திய வொண்சுடர் மாலையும்
மூடிய மூரி நெடுந்தெரு வொப்பவும்
ஊடுசெ லற்கரி தாயிட ருற்றார்.
 
656. மூரி நடைக்களி யானை மதத்தினொ
டேரி னடைக்கலி மாதம் விலாழியும்
மோரி நுரைப்ப வுகுத்த பெருங்கடை
வேரி வெறிக்கள மொப்பது கண்டார்.
 
657. வண்டு படக்குவ ளைப்பிணை நக்கலர்
விண்ட மதுப்பரு கிக்களி யின்மதர்
கொண்டு நடைக்களி யன்ன மிரைப்பதொர்
மண்டு புனற்புரி சைப்பதி சார்ந்தார்.
 
658.கோயின் முகத்தது கோடுயர் சூளிகை
வேயின் முகத்ததின் மாமழை வீழ்வது
ஞாயின் முகத்த நகைத்திரண் முத்தணி
வாயின் முகத்து மடுத்திது சொன்னார்.
 
659.வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலின்
ஓய்தலி லொண்சுட ராழியி னான்றமர்
வாய்தலி னின்றனர் வந்தென மன்னன்முன்
நீதலை சென்றுரை நீள்கடை காப்போய்.
 
660. என்றவர் கூற விருங்கடை காவலன்
நன்றென நாறொளி நீண்முடி யானடி