சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   153
Zoom In NormalZoom Out

 ப வாங்கண்
விஞ்சையர் விமானந் தோற்ற மேலருங் கலங்க ளேற்றிச்
செஞ்சுடர்த் திலகச் செவ்வாய் மகளிரை விமானஞ் சேர்த்திக்
கஞ்சிகை மறைக்கும் போழ்திற் காளைக ளதனைக் கண்டார்.
 
679. என்னிது விளைந்த வாறித் தூதுவர் யாவ ரென்று
கன்னவில் வயிரத் திண்டோட் கடல்வண்ணன் வினவ யாரும்
சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்கென்று துளங்க வாங்
                                            கோர்
கொன்னவில் பூதம் போலுங் குறண்மக னிதனைச்
                                       சொன்னான்.
 
680. அறைகழ லரவத் தானை யச்சுவக் கிரீவ னென்பா
னிறைபுக ழாழி தாங்கி நிலமெலாம் பணிய நின்றான்
இறைதரல் வேண்டு மென்று விடுதரச் செருவந் தானை
இறைவனு மருளிச் செய்தா னிதுவிங்கு விளைந்த தென்றான்.
 
681. திறைக்கட னென்னுமத் தீச்சொற் கேட்டலும்
நிறைக்கட னிரம்பிய நெஞ்சத் தீங்கலுண்
முறைக்கட முளைப்பதோர் முனிவி னொள்ளெரி
கறைப்படு படையவன் கனல மூட்டினான்.
 
682.முடித்தலை முத்துதிர்த் தா