சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   154
Zoom In NormalZoom Out

 ங்கு நெற்றிமேற்
பொடித்தன சிறுவியர்ப் புள்ளி யொள்ளரி
அடுத்தெழு சுடரகத் துக்க நெய்த்துளி
கடுத்தவாட் கண்ணுநீர்த் திவலை கான்றவே.
 
683. படத்திடைச் சுடர்மணி தீண்டப் பட்டெரி
கடுத்திதுமி ழரவெனக் கனன்ற நோக்கமோ
டடுத்தெரிந் தழல்நகை நக்கு நக்கிவை
எடுத்துரை கொடுத்தன னிளைய காளையே.
 
684. உழுதுநன் கடன்கழித் துண்டுவேந்தரை
வழிமொழிந் தின்னணம் வாழு மாந்தர்போல்
எழுதிய திறையிறுத் திருந்து வாழ்வதே
அழகிது பெரிதுநம் மரச வாழ்க்கையே.
 
685. நாளினுந் திறைநுமக் குவப்பத் தந்துநா
டாளுது மன்றெனி லொழிது மேலெம
தோளினுந் தொடுகழல் வலியி னானுமிவ்
வாளினும் பயனெனோ ரீஇய மாந்தர்காள்.
 
686.விடமுடை யெரிக்கொடி விலங்கு நோக்குடை
அடலுடைக் கடுந்தொழி லரவி னாரழற்
படமுடை மணிகொளக் கருதிப் பார்ப்பதோர்
மடமுடை மனத்தனும் மயரி மன்னனே.
 
687.இருங்கலிப் படையினு மிகலி