சூளாமணி மாலை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   155
Zoom In NormalZoom Out

 னாலுமெம்
அருங்கல மிவைபெறற் கரிய வாவதோர்
மருங்குள தெனினது மகளி ராற்சில
பெருங்கலந் தாங்கினாற் பெறலு மாகுமே.
 
688.பாழியான் மெலிந்தவர் திறத்துப் பண்டெலாம்
ஆழியால் வெருட்டிநின் றடர்த்திர் போலுமஃது
ஏழைகா ளினியொழிந் திட்டுச் செவ்வனே
வாழுமா றறிந்துயிர் காத்து வாழ்மினே.
 
689. அன்றெனிற் றிறைகொளக் கருதி னாங்கொரு
குன்றின்மேற் பெறுவதென் வந்து கொள்கயான்
நின்றுதன் னெஞ்சக நிறைய வீழ்வன
வென்றியம் பகழியும் விசும்பு மீவனே.
 
690. இறைவளை மகளிர்போற் கழறி யென்னையெங்
குறையிது கூறுமின் சென்று தூதிர்காள்
திறையினை மறுத்தவர் திறத்துச் செய்வதோர்
முறையுள தெனினது முயன்று கொள்கவே.
 
691. உட்கவாங் குரைத்தலு மொளிர்பொன் மாழையும்
கட்கமழ் கோதையர் கணமு மீண்டது
வட்கிநம் மிறைவற்கு வலிது தெவ்வெனத்
துட்கெனு மனத்தினர் தூத ரேகினார்.
 
692.போகிய தூதர் தங்கோன் பொலங்கழ றொழுத லஞ்சி
ஆகிய தறிந்து சூழு மரி