இதுவும் , மேலதற்கு ஒருவழி எய்தியது முழுவதும் விலக்குகின்றது . (இ-ள்) நூறு ஊர்ந்துவரும் ஆயிரக்கிளவிக்கு - (அவ் ஏழ் என்பது ) நூறு என்னும் சொல் ஊர்ந்து வருகின்ற ஆயிரக்கிளவியாகிய நூறாயிரம் என்பதற்கு,கூறியநெடு முதல் குறுக்கம் இன்று-(முன்) கூறிய நெடுமுதல் குறுகி உகரம் பெறுதல் இன்று. எ - டு : ஏழ் நூறாயிரம் என வரும். `கூறிய' என்றதனான், நெடுமுதல் குறுகி , உகரம் பெற்று எழுநூறாயிரம் என்றும் ஆம். இவ்விலேசினானே ஏழாயிரம் என்றும் ஆம். `இன்னும் அதனானே' இயல்புகணத்து முடிபு கொள்க. எழுஞாயிறு, எழுநாள் என வரும். (97)
|