இஃது, போலி எழுத்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. அகரம் இகரம் - அகரமும் இகரமும் கூட்டிச் சொல்ல, ஐகாரமாகும் - ஐகாரம்போல ஆகும். எ - டு: ஐயர், அஇயர்2 என வரும் . அது கொள்ளற்க. (21)
1. அகர முதலிய மூன்று சூத்திரங்களும் சந்தியக்கரம் விதிப்பனவாகக் கொண்டு "ஆகுமென்றதனை ஆகாதென விலக்கப்படுமென்பாரை, பன்னீ ருயிரு மொழிமுதலாகும்," என்புழியும், ஆகுமென்பதனாற் பன்னீருயிரு மொழிமுதலாகாவென விலக்கப்படும் போலுமெனக் கூறி மறுக்க என்பது , தொல்காப்பியச் சூத்திரவிருத்தி. 2. வயிரம் - வைரம் என எடுத்துக் காட்டலும் ஒன்று.
|