அகத்திணை இயல்

101எற்பாடு,
நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்.

இது, நெய்தற்றிணைக்குக் காலம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) எற்பாடு - எற்படுபொழுது, நெய்தல் ஆதல் மெய்பெற தோன்றும் - நெய்தற்றிணைக்குக் காலமாதல் பொருண்மை பெறத் தோன்றும்.

எற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறு.

(10)

1. 9,10 சூத்திரங்களை ஒரே சூத்திரமாக்குவர் நச்சினார்க்கினியர்.