இது, நெய்தற்றிணைக்குக் காலம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) எற்பாடு - எற்படுபொழுது, நெய்தல் ஆதல் மெய்பெற தோன்றும் - நெய்தற்றிணைக்குக் காலமாதல் பொருண்மை பெறத் தோன்றும். எற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறு. (10)
1. 9,10 சூத்திரங்களை ஒரே சூத்திரமாக்குவர் நச்சினார்க்கினியர். |