இது வாயில்கட்குள்ளதொரு மரபு உணர்த்திற்று. வாயில்கள் எல்லாம் இருவர் மாட்டும் பொருந்திய மகிழ்ச்சிப் பொருண்மையுடைய என்றவாறு. இருவராவார் தலைவனுந் தலைவியும். எனவே வெகுட்சிப் பொருண்மை கூறப்பெறார் என்றவாறு. (37)
1. `புல்லிய' என்றதனான் விருந்தும் புதல்வரும் ஆற்றாமையும் வாயிலாகுப என்று கொள்க. (தொல். பொருள். 178. நச்சி)
|