அகத்திணை இயல்

21எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த ஆகும்.

இது, மேலதற்கு ஒரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) எ நிலமருங்கின் பூவும் புள்ளும் - யாதானும் ஒரு நிலத்திற் குரிய பூவும் புள்ளும், அ நிலம் பொழுதொடு வாராவாயினும் அந் நிலத்தொடும் பொழுதொடும் வந்தில வாயினும், வந்த நிலத்தின் பயத்த ஆகும் - வந்த நிலத்தின் பயத்த ஆகும்.

"வந்தது கொண்டு வாராதது முடித்தல் " (மரபு . 412) என்பதனால் சிறுபான்மை ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க; இவ்வாறு வருவன திணை மயக்கம் அன்றென்றவாறு.1

(21)

1. "வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்" (தொல். சொல். 81) நிலத்தின் பயத்தவாமெனப் பொழுதினையும் நிலம் என்றார்.

(நச்சி.)