| என் - னின். பயனிலையுவமைக்குரியசொல் வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று. எள்ள என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் பயனிலையுவமைக்குச் சொல்லாம் என்றவாறு. 'எழிலி வானம் எள்ளினன் தரூஉங் கவிகை வண்கைக் கடுமான் றோன்றல்'
'மழைவிழை தடக்கை வாய்வா ளெவ்வி' 'புத்தே ளுலகிற் பொன்மரம் புல்ல'
'விண்பொருபுகழ் விறல் வஞ்சி' (புறம். 11) 'கார்கள்ள வுற்ற பேரிசை யுதவி' 'இருநிதி மதிக்கும் பெருவள னீகை' 'வீங்குசுரை நல்லான் வென்ற வீகை' 'விரிபுனற் பேர்யாறு வீழ யாவதும் 'வரையாது சுரக்கும் உரைசால் தோன்றல்.' எனவரும்.(14)
|