செய்யுளியல்

529எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்.

என் - னின் எண்ணு வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று.

எண்ணுப் பயின்றுவருவது எண்ணுவண்ணமாம் என்றவாறு.


உதாரணம்

"நிலம் நீர் வளிவிசும் பென்ற நான்கின்
அளப்பரியையே
நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல்
ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை."

(பதிற்றுப். 14)

எனவரும் .

(216)