தோடு முதலாகச் சொல்லப்பட்ட உறுப்பின் பெயரெல்லாம் புல்லாகிய உறுப்பின் கண்ணே வருமென்றவாறு. இதனானே புறவயிர்ப்பும் உள்வயிர்ப்புமில்லாதனவற்றுள் ஒருசாரன இவ்வகைப்பட்ட உறுப்புப்பெயருடையனவாகி இவையும் புல்லெனப்படும் என்றவாறு. அவையாவன; வாழை ஈந்து தாமரை கழுநீர் என்றித் தொடக்கத்தன. (88)
|