தள்ளிய என்றது : தன்னாற் சுட்டப்பட்ட களம் செவிலியால் அறியப்பெற்றமையான் அதனை நீக்கிய நிலைமையை. தான் அதனைத் தவிர்த்தமையைத் தலைவன் அறியானாதலின் "தெருளாக்காலை" என்றார். |
| எ - டு : | விரியிணர் வேங்கை வண்டுபடு கண்ணியன் |
| தெரியிதழ்க் குவளைத் தேம்பாய் தாரன் |
| அஞ்சிலை இடவ தாக வெஞ்செலற் |
| கணைவலந் தெரிந்து துணைபடர்த் துள்ளி |
| வருதல் வாய்வது வான்றோய் வெற்பன் |
| வந்தன னாயின் அந்தளிர்ச் செயலைக் |
| காவி லோங்குசினைத் தொடுத்த வீழ்கயிற்று |
| ஊசல் மாறிய மருங்கும் பாய்புடன் |
| ஆடா மையின் கலுழ்பில தேறி |
| நீடிதழ்த் தலைஇய கவின்பெறு நீலம் |
| கண்ணென மலர்ந்த சுனையும் வண்பறை |
| மடக்கிளி எடுத்தல் செல்லாத் தடக்குரல் |
| குலவுப் பொறையிறுத்த கோற்றலை இருவிக் |
| கொய்தொழி புனமும் நோக்கி நெடிதுநினைந்து |
| பைதலன் பெயரலன் கொல்லோ ஐதேய் |
| கயவெள் ளருவி சூடிய உயர்வரைக் |
| கூஉங் கண்ணஃதெம் ஊர்என |
| ஆங்கதை யறிவுறல் மறந்திசின் யானே |
(அகம்-38) |
32) வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும் என்பது : தலைவன்பாற் குற்றமின்றென அவனது நிலைத்த இயல்புகளைக் கூறும் பொருண்மைக் கண்ணும் என்றவாறு. |
இது தலைவியை ஆற்றுவித்தல் வேண்டித் தோழி தலைவன்பாற் குற்றத்தை ஏற்றி உரைக்குமிடத்து அதனைத் தலைவி தன்வயின் உரிமையும் அவன்வயின் அயன்மையும் தோன்றக் கூறலின் ''இயற்படுபொருள்" என்றார். |
| எ - டு : | தொடிநிலை நெகிழச் சாஅய்த் தோளவர் |
| கொடுமை கூறின வாயினும் கொடுமை |
| நல்வரை நாடற் கில்லை தோழியென் |
| நெஞ்சிற் பிரிந்த தூஉம் இலரே |
| தாங்குறை நோக்கங் கடிந்ததூஉ மிலரே |
| நிலத்தினும் பெரிதே நேர்ந்தவர் நட்பே |
(நச்-மேற்) |
எனவரும். |