74களவியல்

கேண்மையை  வலியுறுத்தவிடத்து  உலகத்தார் மகட்கொள்ளுமாறு முயன்று
கொள்க என அவனது குறையைக் கேளாது நீக்கற்கண்ணும் என்றவாறு.
 

எ - டு :

கோடீர் எல்வளைக் கொழுமணிக் கூந்தல்

ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின்

தென்கழிச் சேயிறாப் படூஉம்

தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ

(ஐங்-196)
 

4) அருமையின்   அகற்சியும்   என்பது :   வரைந்து கோடல் பின்னர்
ஆவதாக   இஞ்ஞான்று   தலைவியை   அடைதல்  வேண்டுமெனத் தன்
ஆற்றாமையைக் கூறிய  வழிக் குற்றேவல் தன்மையளாகிய  யான் அவளை
நெருங்கி இன்னோரன்ன கூறுதல்  அருமைப்பாடுடையதாகலின்  என்னான்
இயலாதெனக்கூறி அகற்றுதற் கண்ணும் என்றவாறு.
 

எ - டு :

நெருநலும் முன்னாள் எல்லையும் ஒருசிறை

புதுவை யாகலின் கிளத்தல் நாணி

நேரிறை வளைத்தோள்நின் தோழி செய்த

ஆருயிர் வருத்தங் களையா யோஎன

எற்குறை யுறுதிராயின், சொற்குறை

எம்பதத் தெளியள் அல்லள் எமக்கோர்

கட்காண் கடவுள் அல்லளோ பெரும

ஆய்கோல் மிளகின் அமலையங் கொழுங்கொடி

துஞ்சுபுலி வரிம்புறம் தைவரும்

மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே.

(இளம்-மேற்)
 

5) அவளறி வுறுத்துப் பின்வா என்றலும் என்பது : அங்ஙனம் அகற்றிய
வழியும் தலைவன் அகலாது பின்னும் வேண்டுமிடத்து,  நீயே  நின் ஆறாக்
காதலை   அவட்கு   முற்பட   அறிவித்துப்   பின்னர்   என்பால் வருக
என்னுமிடத்தும் என்றவாறு. பின்வா  என்றமையான்  தலைவனது கையுறை
மறுத்துக் கூறலும் இதனானே கொள்க.
 

எ - டு :

தன்னையும் தான்நாணும் சாயலாட் கீதுரைப்பின்

என்னையும் நாணப் படுங்கண்டாய் - மன்னிய

வேயேய்மென் றோளிக்கு வேறா யினியொருநாள்

நீயே உரைத்து விடு

(இளம் - மேற்)
 

இது நீயே உரை என்றது.