| நாள்வேங்கை பொன்சொரியும் நன்மலை நன்னாட |
| கோள்வேங்கை போற்கொடியர் என்னைமார் - |
| கோள்வேங்கை |
| அன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக் |
| கென்னையோ நாளை எளிது |
(திணை - நூற் - 20) |
இது கையுறை மறுத்துப்பின் வா என்றது. |
6) பேதைமை யூட்டலும் என்பது : அங்ஙனங் கூறிய பின்னரும் தலைவன் அகலாது நிற்றலை நோக்கி நின் குறையை யான்கூற நேரினும் அதனையறியும் முதுக்குறை யுடையாளல்லள் எனத் தலைவிக்குப் பேதைமை ஏற்றிக் கூறலும் என்றவாறு. |
(முதுக்குறை = அறிவுமுதிர்ச்சி) பேதைமையூட்டலும் எனப் பொதுப்படக் கூறியமையான் தலைவற்குப் பேதைமை ஏற்றிக் கூறலும் கொள்க. |
| எ - டு : | நறுந்தண் தகரம் வகுளம் இவற்றை |
| வெறும்புதல்போல் வேண்டாது வெட்டி-எறிந்துழுது |
| செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு |
| நொந்தினைய வல்லளோ நோக்கு |
(திணை-நூற்-24) |
"புன்தலை மந்திக் கல்லா வன்பறழ்" என்னும் நற்றிணைச் (379) செய்யுளும் அது : தலைவற்குப் பேதைமையூட்டியதற்கு இலக்கியம் வந்தவழிக் கண்டுகொள்க. இதற்கு நச்சினார்க்கினியர் காட்டும் எடுத்துக்காட்டுக்கள் இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் என்பதற்குரியவாகலின் ஈண்டைக்கு ஏலாமையறிக. |
7) முன்னுறு புணர்ச்சி முறை நிறுத்துரைத்தலும் என்பது : பாலது ஆணையாற் கூடியாங்குப் பின்னும் அவ்விதி கூட்டுவிக்கக் கூடுக என, முன்னர்ப்புணர்ந்த முறைமையினை எடுத்துக்காட்டிக் கூறுதற் கண்ணும் என்றவாறு. |
எ - டு : | வந்துழிக் கண்டுகொள்க. |
இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் இத்தொடர் மொழியமைப்பிற்கு ஏலாமல் இயைபின்றி நிற்றலையறிக. |
8) அஞ்சி யச்சுறுத்தலும் என்பது : தன்னாற் குறை முடியாமையை அறியும் தலைவன் பிறவாறு முயலுங்கொல் என அஞ்சித் தலைவி புறம் போந்து விளையாடாமைக்குக் காரணம் அவள்தம் குரவரையும் தமரையும் அஞ்சுதலே எனத்தலைவிக்கு அச்சத்தை ஏற்றிக் கூறுதற்கண்ணும் என்றவாறு. |