| சோர்ந்த குருதி ஒழுகமற் றிப்புனத்திற் |
| போந்த திலையக் களிறு |
| (திணைமொழி - 8) |
| நெடுந்தேர் கடைஇத் தமியராய் நின்று |
| கடுங்களிறு காணீரோ என்றீர்-கொடுங்குழையார் |
| யானை அதருள்ளி நிற்பரோ தம்புனத்து |
| ஏனல் கிளிகடிகு வார் |
| (இளம் - மேற்) |
| ஏனல் காவல் இவளும் அல்லள் |
| மான்வழி வருகுவன் இவனும் அல்லன் |
| நரந்தங் கண்ணி இவனோ டிவளிடைக் |
| கரந்த உள்ளமொடு கருதியது பிறிதே |
| நம்முன் நாணினர் போலத் தம்முள் |
| மதுமறைத் துண்டோர் மகிழ்ச்சி போல |
| உள்ளத் துள்ளே மகிழ்ப |
| சொல்லும் ஆடுப கண்ணி னானே |
(இளம் - மேற்) |
இது தோழி மதியுடம்பாட்டினுள் "இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல்" என்னும் வகையாம். இது தலைவன் கூற்றினுள் ஊரும் பேரும் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதி என்ற கிளவிக்கியையத் தோழி மாட்டு நிகழும் கிளவியாம். |
இவை பத்தும் தோழி மதியுடம்பாட்டிற்குரிய கிளவிகளாம். மதியுடம்படுதற்கு இவற்றுள் ஒரு வகையே சாலும். எனினும் மதியுடம்பாட்டின் இலக்கண மரபுகள் யாவும் விளங்க இங்ஙனம் விரித்தோதினார் என்க. |
எனவே, இம்மூன்று கூற்றானும் தோழி உணர்தல் வேண்டுமென்பதும் இவை இம்முறையே நிகழ்தல் வேண்டும் என்பதும் யாப்புறவில்லை வேண்டும் வழி வேண்டியாங்கு நிகழுமெனக் கொள்க. |
10) புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற் கண்ணும் என்பது : முன்னுறவுணர்தல் முதலியவற்றான் அவர்தம் களவு நிலை தன்மனத்தே பொருந்திய பின்னர்த் தலைவினிடத்தே பணிந்தொழுகுதற் கண்ணும் என்றவாறு. புணர்ந்தபின் என்பது தலைவன் தலைவியது புணர்ச்சி உண்மையைத் தெளிந்த பின்னர் என்றவாறாம். |
| எ - டு : | வாங்குகோல் நெல்லொடு என்னும் (குறிஞ்சிக்கலியுள்) |
| "நிரைவளை முன்கைஎன் தோழியை நோக்கிப் |