80களவியல்

பட்டருளிய  வழி    அதனைத்     தலைவன்பால்   சென்று  விரும்பிக்
கூறுமிடத்தும் என்றவாறு. அவ்வழிக்  கூறப்பெறுவன :  தலைவி  கையுறை
ஏற்றமை கூறலும் பகற்குறி - இரவுக்குறி   நேர்ந்தமை கூறலும்.  குறியிடங்
கூறலும் குறியிடத்துத் தலைவனது வரவு கூறலும் தலைவன்  நீங்கிய வழித்
தலைவியொடு கூறலும் பிறவுமாம்.
 

எ - டு :

பொன்மலியு மேனியாள் பூஞ்சுணங்கின் மென்முலைகள்

என்மெலிய வீங்கினவே பாவமென் - றென்மெலிவிற்

கண்கண்ணி வாடாமை யானல்ல வென்றுரைத்தாள்

உண்கண்ணி வாடாள் உடன்று

(திணை - நூற் - 21)
 

கடும்புலால் புன்னை கடியுந் துறைவ

படும்புலால் புட்கடிவான் புக்க - அடும்புலாந்

தாழைமா ஞாழல் ததைந்துயர்ந்த தாழ்பொழில்

ஏழைமா நோக்கி யிடம்

(திணை - நூற் - 44)
 

இவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும்

பெயர்பட விளங்கிய இளையரும் ஒலிப்பர்

கடலாடு வியலணிப் பொலிந்த நறுத்தழை

திதலை யல்குல் நலம்பா ராட்டிய

வருமே தோழி வார்மணற் சேர்ப்பன்

நிறைபட ஓங்கிய முழவுமுதற் புன்னை

மாவரை மறைகம் வம்மதி பானாட்

பூவிரி கானற் புணர்குறி வந்துறும்

மெல்லிணர் நறும் பொழிற் காணா

வல்ல லரும்படர் காண்கம் நாம்சிறிதே

(நற் - 307)
 

புணர்ந்தோர் புண்கண் அருளலும் (அகம்-108) என்பது அது.
 

இனி   நயம்  புரிதற்கண்  தலைவன் சிலவற்றை  மறைத்தலை நோக்கி
என்னை மறைத்தல் எவனாகியர் என்றலும், அறியாள்  போன்று  குறியாள்
கூறலும், படைத்து மொழிதலும்,   குறிப்பு   வேறு கொளலும்  பிறவுமாகத்
தோழி கூறுவனவெல்லாவற்றையும் இதுவே இடமாக முடித்துக் கொள்க.
 

எ - டு :

நிறைத்திங்கள் சேர்ந்தோடும் நீண்மலை நாட

மறைக்கப் படாதேனை மன்னும்-மறைத்துக்கொண்டு

ஓடினாய் ஆதலால் ஒண்டொடியாள் தன்பக்கம்

கூடக் கிடந்ததொன் றில்

(நச் - மேற்)