களவியல்85
எ - டு :

கௌவையம் பெரும்பழி தூற்ற நாணழிந்து 

பைதலஞ் சிறுநுதல் பசலை பாய 

நம்மிகற் படுத்த அவரினும் அவர்நாட்டுக் 

குன்றங் கொடியகொல் தோழி 

ஒன்றுந் தோன்றா மழைமறைந் தனவே
 

(நச்-மேற்)
 

இஃது இயற்பழித்தல்
 

மகிழ்நன் மார்பே வெய்யை யால்நீ 

அழியல் வாழி தோழி நன்னன் 

நறுமா கொன்று நாட்டிற் போக்கிய 

ஒன்றுமொழிக் கோசர் போல

வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே  

(குறு-73)
 

இஃது வற்புறுத்தது.
 

அழியல் ஆயிழை! அன்புபெரி துடையன் 

பழியும் அஞ்சும் பயமலை நாடன் 

நில்லா மையே நிலையிற் றாகலின் 

நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சின்

கடப்பாட் டாளன் உடைப்பொருள் போலத் 

தங்குதற் குரிய தன்றுநின் 

அங்கலுழ் மேனிப் பாஅய பசப்பே 

(குறு-143)
 

இஃது ஆற்றுவித்தது.
 

21) ஆற்றது    தீமை    அறிவுறுகலக்கமும்    என்பது :  தலைவன் குறியிடத்திற்கு   வருகின்ற   நெறியின்கண்       உள்ள     தீமைகளை
அறிந்துள்ளமையான்  கலங்குதற்கண்ணும் என்றவாறு.
 

எ - டு :

கழுதுகால் கிளர ஊர்மடிந் தன்றே 

உருகெழு மரபின் குறிஞ்சி பாடி 

கடியுடை வியன்நகர் கானவர் துஞ்சார்

வயக்களிறு பொருத வாள்வரி உழுவை 

கல்முகைச் சிலம்பிற் குழுமும் அன்னோ 

மென்றோள் மெலிந்துநாம் வருந்தினும் இன்றவர் 

வாரா ராயினோ நன்றுமன் தில்ல 

உயர்வரை யடுக்கத்து ஒளிறுபு மின்னி 

பெயல்கால் மயங்கிய பொழுதுகழி பானாள் 

திருமணி அரவுத்தேர்ந் துழல 

உருமுச் சிவந்தெறியும் ஓங்குவரை யாறே  

(நற்-255)
 

22) காப்பின்    கடுமை    கையற   வரினும்   என்பது : கடமையான்
நற்றாயும்  செவிலியும்  தலைவியைக்   காவல் செய்தல்    மிக்கவிடத்தும்
என்றவாறு.