| இன்னா அதர்வர ஈர்ங்கோதை மாதராள் |
| | என்னாவாள் என்னுமென் நெஞ்சு. |
| (ஐந்-ஐம்-19) |
இஃது இரவுக்குறி விலக்கியது. |
| வேரல் வேலி வேர்க்கோட் பலவின் |
| சாரல் நாட செவ்வியை யாகுமதி |
| யாரஃ தறிந்தி சினோரே சாரல் |
| சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்குஇவள் |
| உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே |
| (குறு-18) |
இது காதல் மிகுதி கூறியது. பிறவும் என்றதனான் தலைவனைப் பழித்துக் கூறுதல் முதலாயவை கொள்க. |
| நெடுவரை மிசையது குறுங்கால் வருடை |
| தினைபாய் கிள்ளை வெரூஉம் நாட |
| வல்லைமன் றம்ம பொய்த்தல் |
| வல்லாய் மன்றநீ அல்லது செயலே |
| (ஐங்-287) |
இது தலைவனைப் பழித்தது. |
| குன்றக் குறவன் காதல் மடமகள் |
| மென்றோட் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல |
| பைம்புறப் படுகிளி ஓப்பலர் |
| புன்புல மயக்கத்து விளைந்தன திணையே |
| (ஐங்-260) |
இது புனங்காவல் இனி இன்றென்றது. |
| வெறிகமழ் வெற்பன் மெய்ந்நீர்மை கொண்டது |
| அறியாள் மற்றன்னோ அணங்கணங்கிற் றென்று |
| மறியீர்ந் துதிரந்தூய் வேலற் றறீஇ |
| வெறியோ டலம்வரும் யாய் |
| (ஐந்-ஐம்-20) |
இது வெறி அச்சுறுத்தியது. |
| இனமீ னிருங்கழி ஓதம் உலாவ |
| மணிநீர் பரக்குந் துறைவ தகுமோ |
| குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம் |
| நினைநீர்மை இல்லா ஒழிவு |
| (திணை-ஐம்-44) |
இஃது அருளல் வேண்டுமென்றது. |
"கோழிலை வாழைக் கோண்மிகு பெருங்குலை" என்னும் அகப்பாட்டினுள் (அகம்-2) "பல்வேறு விலங்கும் எய்தும் நாட" என அந்நாட்டினை இறப்பக்கூறி, அந்நாடுடைமையின் |