| சுடரின்று தமியளாய்ப் பனிக்கும், வெருவர |
| மன்ற மராத்த கூகை குழறினும் |
| நெஞ்சழிந் தரணம் சேரும் அதன்றலைப் |
| புலிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு |
| முருகின் அன்ன சீற்றத்துக் கடுந்திறல் |
| எந்தையும் இல்லா னாக |
| அஞ்சுவள் அல்லளோ இவளிது செயலே |
| (அகம்-158) |
இதன்கண் தலைவியை ஐயுற்ற தாயினைக் கனவு மருட்டலும் உண்டு என்றது முதலாகப் பொய்யென மாற்றி அணங்கும் வருமென மெய்வழிக் கொடுத்தமை காண்க. |
26) அவள் விலங்குறினும் என்பது : தலைவி [காப்பு மிகுதியானும் நொதுமலர் வரைவு வேண்டுதலைக் கேட்டலானும், தலைவற்குத் தமர் வரைவு மறுத்தலானும்] நிலை வேறுபட்டவழிச் செவிலி இவட்கு இஃது ஏற்றினா னாயது எனத் தெரியக், கட்டுங் கழங்கும் பிறவுமாகிய குறி பார்த்தலைச் செய்யுமிடத்தும் என்றவாறு. |
அவள் என்றது செவிலியை. விலங்குறுதல் என்றது தலைவியின் ஒழுகலாறு நோக்கித் தான் கருத்து மாறுபடுதலை. |
| எ - டு : | பொய்படு பறியாக் கழங்கே, மெய்யே |
| மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம் |
| மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன் |
| ஆண்டகை விறல்வேள் அல்லன்இவள் |
| பூண்டாங் கிளமுலை அணங்கி யோனே |
| (ஐங்-250) |
இது கழங்கு பார்த்துழிக் கூறியது. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. |
27) களம்பெறக் காட்டினும் என்பது : செவிலி அறிவரை வினாவி இது தெய்வத்தானாயது எனக் கருதியவழிச் செவிலி வெறியாட்டு நிகழ்த்துவான் வேண்டிக் களத்தைப்பெற, அவ்வழித் தலைவியது நிலைமையைத் தாயர் உணருமாறு தக்க சொற்களாற் காட்டுதற்கண்ணும் என்றவாறு. |
| எ - டு : | கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி |
| அறியா வேலன் வெறியெனக் கூறும் |
| அதுமனங் கொள்குவை அனைஇவள் |
| புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே |
| (ஐங்-243) |
இது தாய்க்கு உரையாற் காட்டியது. |