92களவியல்
எ - டு :

சுள்ளி சுனைநீலம் சோமாலிகை செயலை 

அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி 

இதணாற் கடியொடுங்கா ஈர்ங்கடா யானை 

உதணாற் கடிந்தான் உளன். 

(திணை-நூற்-2)
 

இது களிறுதருபுணர்ச்சியான் அறத்தொடு நின்றது.
 

வில்லார் விழவினும் வேலாழி சூழுலகில் 

நல்லார் விழவகத்தும் நாம்காணேம்-நல்லாய் 

உவர்க்கத் தெறிதிரைச் சேர்ப்பனொ டொப்பார் 

சுவர்க்கத் துளராயிற் சூழ்   

(திணை-நூற்-62)
 

இது பிறவாறு  அறத்தொடு நின்றது. இங்ஙனம் அறத்தொடு நிலை தோன்ற
வருவனவற்றையெல்லாம்  இதன்கண்  அடக்கிக்  கொள்க.   இவை யாவும்
'எளித்தல்   ஏத்தல்'   முதலாயன   எழு   வகையுள்   அடங்குமாற்றைப்
பொருளியலுரையுள் கண்டுகொள்க.
 

31) வரைவுடம்பட்டோர்க்    கடாவல்   வேண்டினும்   என்பது : தமர்
ஒப்பிய வழி வரைதற்கு  உடன்பட்ட   தலைவனை   நீட்டியாது விரைந்து
புரிக எனக் கடாவுதலை விரும்பியவிடத்தும் என்றவாறு.
 

எ - டு :
 
வந்துழிக் கண்டு கொள்க. கலி-138 ஒருபுடை ஒக்கும்.
 

32) ஆங்கதன்   தன்மையின்   வன்புறை   உளப்படப் பாங்குற வந்த
நாலெட்டு   வகையினும்   தாங்கருஞ்  சிறப்பிற்   றோழி மேன என்பது :
அங்ஙனம் வரைவுகடாய   அவ்வியல்பானே   வதுவை   நிகழும்   வரை
ஆற்றியிருப்பாயாக   எனத்  தலைவியை   வற்புறுத்துக்   கூறும்  கிளவி
உட்படச்   செம்மையுறக்  கூறப்பெற்ற  முப்பத்திரண்டு      கிளவிகளும்
தடுத்தற்கரிய     சிறப்பினையுடைய   தோழியிடத்தனவாம்    என்றவாறு.
 

எ - டு :

உரவுத்திரை பொருத பிணர்படு தடவுமுதல் 

அரவுவாள் வாய முள்ளிலைத் தாழை 

பொன்னேர் தாதிற் புன்னையொடு கமழும் 

பல்பூங் கானற் பகற்குறி வந்துநம் 

மெய்கவின் சிதையப் பெயர்த்தன னாயினும் 

குன்றிற் றோன்றுங் குவவுமணல் ஏறிக் 

கண்டனம் வருகம் சென்மோ தோழி 

தண்டா ரகலம் வண்டிமிர் பூதப் 

படுமணிக் கலிமாக் கடைஇ 

நெடுநீர்ச் சேர்ப்பன் வரூஉ மாறே 

(நற் - 235)
 

இது தலைவன் வரைய வருகின்றமை கூறி வற்புறுத்தியது.