பிறவாறு வருவனவெல்லாம் இவற்றுள் அடங்குமென்பார் நாலெட்டு என்னாது நாலெட்டுவகையும் என்றார். ஒன்றித் தோன்றும் தோழி என்பது விளங்கத் தாங்கருஞ்சிறப்பின் தோழி என்றார். |
| சூ. 117 : | களவல ராயினும் காமம்மெய்ப் படுப்பினும் |
| அளவுமிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும் |
| கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் |
| ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் |
| ஆடிய சென்றுழி அழிவுதலை வரினும் |
| காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும் |
| தோழியை வினவலும் தெய்வம் வாழ்த்தலும் |
| போக்குடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக் |
| கற்பி னாக்கத்து நிற்றற் கண்ணும் |
| பிரிவின் எச்சத்தும் மகள்நெஞ்சு வலிப்பினும் |
| இருபாற் குடிப்பொருள் இயல்பின் கண்ணும் |
| இன்ன வகையிற் பதின்மூன்று கிளவியொடு |
| அன்னவை பிறவும் செவிலி மேன (25) |
க - து : | களவின்கண் செவிலி தானே கூறுவனவாயும் தலைவியும் தோழியும் கொண்டெடுத்துக் கூறுவனவாயும் வரும் செவிலிக்குரிய கூற்று வகையாமாறு கூறுகின்றது. |
பொருள்:1. களவு அலராயினும் என்பது : தலைவியது களவொழுக்கம் அயலார்க்குப் புலனாய் அலர் தூற்றப்படுமிடத்தும் என்றவாறு. |
| எ - டு : | பாவடி யுரல பகுவாய் வள்ளை |
| ஏதில் மாக்கள் நுவல்தலும் நுவல்ப |
| அழிவ தெவன்கொல்இப் பேதை யூர்க்கே |
| பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் |
| கருங்கட் டெய்வம் குடவரை எழுதிய |
| நல்லியற் பாவை யன்னவென் |
| மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே |
| (குறு-89) |
இது செவிலி தானே கூறியது. |
| அம்ம வாழி தோழி நென்னல் |
| ஓங்குதிரை வெண்மணல் உடைக்குந் துறைவற்கு |
| ஊரார் பெண்டென மொழிய என்னை |