94களவியல்

அதுகேட்டு அன்னாய், என்றனள் அன்னை 

       

பைபைய எம்மை என்றனென் யானே  

(ஐங்-113)
 

இது செவிலிகூற்றைத் தலைவி கொண்டு கூறியது.
 

2) காமம்  மெய்ப்படுப்பினும்  என்பது :   தலைவி மறைத்தொழுகினும்
கூட்டத்தான்   விளைந்த பொலிவு  அவளது   மெய்யின்கண்   விளங்கக்
காணுமிடத்தும் என்றவாறு.
 

எ - டு :

மணியிற் றிகழ்தரும் நூல்போல் மடந்தை 

அணியிற் றிகழ்வதொன் றுண்டு  

(குறள்-1273)
 

இது செவிலிதானே கூறியது.
 

3. அளவுமிகத்   தோன்றினும்   என்பது :   தலைவியது தோற்றமும்
செய்கையும்   பெதும்பைப் பருவத்து  இயல்பினைக்  கடந்து   பெண்மைத்
தன்மை   மிக்குக்         காணப்படுதற்கண்ணும்           என்றவாறு.
   

அஃதாவது   கண்ணும்  முலையும் தோளும் கதிர்ப்புற்று விளங்குதலும்,
பேச்சும் விளையாட்டும் அருகிக் காணப்படுதலுமாம்.
 

எ - டு :

கண்ணிறைந்த காரிகை காம்பேர்தொட் பேதைக்குப் 

பெண்ணிறைந்த நீர்மை பெரிது.  

(குறள்-1272)
 

4) தலைப்பெய்து   காணினும்  என்பது :  களத்தை  நோக்கி    வந்த
தலைவனைத்   தற்செயலாக   எதிர்பட்டுக் காண   நேரினும் குறியிடத்துச்
சென்று மீளும்   தலைவியை   அவ்வாறே   காண   நேரினும்  அதுபற்றி
எண்ணுமிடத்தும் என்றவாறு. தலைப்பெய்தல் = ஓரிடத்து எதிர்ப்படுதல்.
 

எ - டு :

இரும்புலி தொலைத்த 

(அகம் - 272)
 

என்னும் அகப்பாட்டினுள் 

குறியிறைக் குரம்பைநம் மனைவயிற் புகுதரும் 

மெய்ம்மலி உவகையன் அந்நிலை கண்டு 

முருகென உணர்ந்து முகமன் கூறி 

உருவச் செந்தினை நீரொடு தூஉய் 

நெடுவேட் பரவும் அன்னை" எனவும்
 

உருமுரறு கருவிய (அகம்-158) என்னும் அகப்பாட்டினுள்
 

"மிடையூர் பிழியக் கண்டனென் இவளென 

அலையல் வாழிவேண் டன்னை"
 

எனவும் தோழி கொண்டுகூறினமை காண்க.