5. கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும் ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் என்பது: கட்டுக் கண்டதனானும் கழங்கிட்டுப் பார்த்ததனானும் தலைவியது வேறுபாடு வேலனான் எய்தியது எனத் தானும் நற்றாயும் ஒன்றுபட்ட கருத்தானே வெறியாட்டெடுத்தலைச் செய்யும் செயலின் கண்ணும் என்றவாறு. |
'தாய்க்கும் வரையார் உணர்வுடம் படினே' என மேற்கூறலான் இருவர் என்றது செவிலியும் நற்றாயும் என்பது போதரும். |
| எ - டு : | பெய்ம்மணல் முற்றங் கவின்பெற இயற்றி |
| மலைவான் கோட்ட சினைஇய வேலன் |
| கழங்கினான் அறிகுவ தென்றால் |
| நன்றா லம்ம நின்றவிவள் நலனே |
| (ஐங்-248) |
இது வேலன் கழங்குபார்த்தமை கூறியது. |
| அறியா மையின் வெறியென மயங்கி |
| அன்னையும் அருந்துயர் உழந்தனள் அதனான் |
| எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ் |
| ஆய்மலர் உண்கண் பசப்பச் |
| சேய்மலை நாடன் செய்த நோயே |
| (ஐங்-242) |
இது வெறியென அன்னை மயங்கினமை கூறிற்று. "அணங்குடை நெடுவரை" என்னும் அகப்பாட்டினுள் (22) கட்டுப் பார்த்தல் கூறிற்று. கண்டு கொள்க. |
6) ஆடிய சென்றுழி அழிவுதலை வரினும் என்பது : அங்ஙனம் அவர் வெறியாட்டெடுத்தலை மேற்கொண்டவழி அதற்கு (தோழியான்) இடையூறு நேர்ந்த விடத்தும் என்றவாறு. |
| முருகயர்ந்து வந்த முதுவாய் வேல |
| சினவல் ஓம்புமதி வினவது உடையேன் |
| பல்வேறு உருவின் சில்லவிழ் மடையொடு |
| சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி |
| வணங்கினை கொடுத்தி யாயின், அணங்கிய |
| விண்தோய் மாமலைச் சிலம்பன் |
| ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே |
| (குறு-362) |
என்றாற் போலத் தோழி வெறி விலக்குதலை அழிவுதலை வருதல் என்றார். செவிலி கூற்று வந்துழிக் கண்டுகொள்க. |