7) காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும் என்பது : தலைவி தன்னொடு உடன் துயிலுங்கால் அவள் கனவின்கண் அரற்றுமிடத்தும் என்றவாறு. |
| எ - டு : | நெடுவே லேந்தி நீயெமக்கு யாஅர் |
| தொடுதல் ஓம்பென அரற்றலும் அரற்றும் |
| கடவுள் வேங்கைக் காந்தளும் மலைந்த |
| தொடலைக் கண்ணி பரியலும் என்னும் |
| பாம்புபட நிவந்த பயமழைத் தடக்கைப் |
| பூம்பொறிக் கழற்கால் ஆஅய் குறைத்துக் |
| குறுஞ்சுனை மலர்ந்த குவளை நாறிச் |
| சிறுதேன் கலந்த அம்மெல் லாகம் |
| வாழியெம் மகளை உரைமதி இம்மலைத் |
| தேம்பொதி கிளவியென் பேதை |
| யாங்கா டினளோ நின்னொடு பகலே |
| (நச்-மேற்) |
இதன்கண் அரற்றலும் எனத் தலைவி கனவின்கண் அரற்றியதும் அது பற்றித் தோழியொடு கூற்று நிகழ்த்தியவாறும் கண்டு கொள்க. |
8) தோழியை வினவலும் என்பது : களவு அலராயின வழியும் அதன் பின்னும் தானே கூறும் கூற்றொடு வேண்டுமிடத்துத் தோழியிடத்து இஃது எற்றினானாயிற்று என வினவுதற் கண்ணும் என்றவாறு. இச்சூத்திரத்தான் விதந்து கூறிய கூற்றுக்களையன்றிப் பிறவாறு கூறும் செவிலி கூற்றெல்லாம் தோழியிடமாக நிகழ்தலின் அவற்றை எல்லாம் அடக்கித் "தோழியை வினவலும்" என்றார். அதனான் அதுவும் ஒரு கிளவியாகத் தொகை பெறுதலாயிற்றென்க. |
| எ - டு : | "ஓங்குமலை நாட ஒழிக நின்வாய்மை |
| காம்புதலை மணந்த கல்லதர்ச் சிறுநெறி |
| அறுபகை பேணாது இரவின் வந்திவள் |
| பொறிகிளர் ஆகம் புல்லா தோள்சேர்பு |
| அறுகாற் பறவை அளவில மொய்த்தலின் |
| கண் கோளாக நோக்கிப் பண்டும் |
| இனையை யோஎன வினவினள் யாயே" |
| (நற்-55) |
எனச் செவிலி வினாயமையைத் தோழி கொண்டு கூறியமை கண்டு கொள்க. |
9) தெய்வம் வாழ்த்தலும் என்பது : தலைவியைக் களவின்கண் பெற்ற தலைவன் வரைந்து கற்பொழுக்கத்தினைமேவி |