நலம் பயத்தலை விரும்பி அதுகூடுதற் பொருட்டுத் தெய்வத்தைப் பராவி வாழ்த்துமிடத்தும் என்றவாறு. |
| எ - டு : | பெருமலைச் சிலம்பின்; என்னும் அகப்பாட்டினுள் | (282) |
| "வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு |
| இன்றீம் பலவின் ஏர்கெழு செல்வத்து |
| எந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர்வாய் |
| அம்பல் ஊரும் அவனொடு மொழியும் |
| சாயிறைத் திரண்ட தோள்பா ராட்டி |
| யாயும் அவனே என்னும் யாமும் |
| வல்லே கவருக வரைந்த நாள்என |
| நல்லிறை மெல்விரல் கூப்பி |
| இல்லுறை கடவுட்கு ஒக்குதும் பலியே" |
எனப் பராவியவாறு கண்டுகொள்க. |
10) போக்குடன் கழிந்தபின் தோழியொடு கெழீஇக் கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்ணும் என்பது : தலைவனொடு தலைவி உடன்போக்குற்றமை யறிந்து தோழியின் கருத்தொடு தானும் ஒன்றுபட்டுத் தலைவி மேற்கொண்ட கற்பினது ஆக்கத்தின்கண் உவப்புற்று நிற்குமிடத்தும் என்றவாறு. தலைவன் உடன்போக்குக் கற்பிற்கு ஆக்கமாதலின் ஆக்கத்து நிற்றற் கண்ணும் என்றார். |
| எ - டு : | பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு |
| தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய |
| நாலுர்க் கோசர் நன்மொழி போல |
| வாயா கின்றே தோழி ஆய்கழல் |
| சேயிலை வெள்வேல் விடலையொடு |
| தொகுவளை முன்கை மடந்தை நட்பே |
| (குறு-15) |
நட்பு வாயாகின்று எனத் தலைவியின் கற்பினாக்கங் கூறிச் செவிலி உவந்தவாறு கண்டு கொள்க. |
11) பிரிவின் எச்சத்தும் என்பது : தலைவி உடன் பாக்குற்றவழித் தேடிப் பின் செல்லுதலைத் தவிர்ந்து வருந்துமிடத்தும் என்றவாறு. |
| எ - டு : | நாள்தொறும் கலிழும் என்னினும் இடைநின்று |
| காடுபடு தீயின் கனலியர் மாதோ |
| நல்வினை நெடுநகர்க் கல்லெனக் கலங்க |
| பூப்புரை உண்கண் மடவரற் |
| போக்கிப் புணர்த்த அறனில் பாலே |
| (ஐங்-376) |