98களவியல்

12) மகள்    நெஞ்சுவலிப்பினும்  என்பது :  தலைவி    தலைவன்வழி
ஒழுகற்கு   அவள்     உள்ளம்    உறுதி    பூண்டுள்ள    நிலையினை
உணர்ந்தவிடத்தும் என்றவாறு. (வலித்தல் = திண்ணிதாதல் - உறுதியுறுதல்)
 

எ - டு :

தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியின் 

இனிதாம் கொல்லோ தனக்கே பனிவரை 

இனக்களிறு வழங்கும் சோலை 

வயக்குறு வெள்வே லவற்புணர்ந்து செலவே 

(ஐங்-379)
 

13. இருபாற் குடிப்பொருள்   இயல்பின்கண்ணும்  என்பது :  தலைவன்
தலைவியது  குடிமரபு  முதலாய  பொருள்கள் அமைந்துள்ள இயல்பினைக்
கருதுமிடத்தும் என்றவாறு.
 

பொருள்    என்றது   செல்வம்,   சீர்த்தி,   குணம்,        தொழில்
முதலியவற்றை.  அவை  ஒத்துள்ள   வழி  உவப்பும்,  முரண்பட்ட வழிக்
கலக்கமும் எய்துதலின் கூற்று நிகழ்த்தற்கு அவை  காரணமாயின என்க.
 

எ - டு : "காமர்  கடும்புனல்"    என்னும்   குறிஞ்சிக்கலியுள்    (39) இருவர்தம்       குடிப்பிறப்பு   முதலாயவை     ஒத்துள்ளமை     கூறி
அறத்தொடுநின்றமை கண்டு கொள்க.
 

இன்னவகையிற்   பதின்மூன்று   கிளவியொடு   அன்னவை   பிறவும்
செவிலிமேன   என்பது :   இவ்வாறு   வகைப்பட்டுவரும்    பதின்மூன்று
கிளவிகளும்   அவைபோல்வனவாக   வரும்பிற  கிளவிகளும் செவிலியின்
பாலவாம் என்றவாறு. அன்னபிற என்றவற்றுள் சில வருமாறு.
 

வல்லுரைக்    கடுஞ்சொல்    அன்னை    துஞ்சாள் (அகம். 122-4)
சிறுகிளிகடிதல் தேற்றாள் இவள் (அகம். 28-12) எனவரும்.
 

சூ. 118 : 
 

தாய்க்கும் வரையார் உணர்வுடம் படினே 
 
(26)
 

க - து : 

மேல் செவிலிக்கு ஓதப்பெற்ற கிளவிகள் நற்றாய்க்கு
உரியவாமாறு கூறுகின்றது.
 

பொருள் : தலைவியை   உற்றுநோக்கி   அவளது  ஒழுகலாற்றினைச்
செவிலி உணர்ந்தாங்கு  நற்றாயும்   ஆராய்ந்து    மதியுடம்படுவாளாயின்
செவிலிக்கு ஓதப்பெற்ற கிளவிகள் உரியவாகக் கோடலை  நீக்கார் நூலோர்.
 

நற்றாய்   மனையறம்   பேணும்  கடப்பாட்டினளாதலின் செவிலிபோல
உற்றுநோக்கி யுணர்தல் அருமைத்தாகலின்