களவியல்99

செவிலியொடு   மாட்டெறிந்து   கூறப்பட்ட   தென்க.   நற்றாய்  கூற்றுப்
பெரும்பான்மையும் கொண்டெடுத்துக் கூறும் மொழிகளாகவே வரும்.
 

எ - டு :

தெறுவ தம்ம நும்மகள் விருப்பே 

உறுதுயர் அவலமொடு உயிர்செலச் சாஅய் 

பாழ்படு நெஞ்சம் படரடக் கலங்க 

நாடுஇடை விலங்கிய வைப்பின் 

காடிறந் தனள்நம் காத லோளே 

(ஐங்-313)
 

என்னும் உள்ளினள் கொல்லோ தன்னை 

நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு 

அழுங்கல் மூதூர் அலரெழச் 

செழும்பல் குன்றம் இறந்தஎன் மகளே 

(ஐங்-372)
 

எனவரும். பிறவும் சான்றோர் செய்யுட்கண் கண்டுகொள்க.
 

சூ. 119 :

கிழவோ னறியா அறிவினள் இவளென 

மையறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின் 

ஐயக் கிளவி அறிதலும் உரித்தே 

(27)
 

க - து : 

இதுவும்  தாயர்க்குரியதொரு  கிளவியாமாறு  கூறுகின்றது.  இது
சான்றோரைவினவி அமைதிகொள்ளும்  நிலைமைத்    தாகலின்
பிரித்துக் கூறப்பட்டது.
  

பொருள் : குடிமை  முதலாயவற்றான் இவன் தனக்குத் தக்கான் எனத்
தேர்ந்து  கொள்ளற்கு  நிரம்பாத  அறிவினை  உடையள்    எனக்கருதிக்
குற்றந்தீர்ந்த   சிறப்பினையுடைய   அந்தணர்   முதலாய சான்றோரிடத்து
இவள் வாழ்க்கை   எந்நிலைமைத்  தாகும்   என ஐயுற்று வினவிக் கூறும்
கிளவியானே   தலைவியது  நிலையை   அறிந்து   கோடலும் மேற்கூறிய
தாயர்க்குரித்தாகும்.
 

அஃது   உடன்    போய   தலைவியைத்   தேடிச்சென்ற    செவிலி
முக்கோற்பகவரை   வினவியாங்கு (கலி-8)         வினவிக்     கலக்கம்
நீங்குதலாகவரும். எடுத்துக்காட்டு வந்துழிக் கண்டுகொள்க.
 

சூ. 120 :

தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல் 

எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை 

பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப் 

பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப 

(28)