எனவே பாங்கனால் இடந்தலைப்படலும் பாங்கி இடை நின்று கூட்டுதலுமாகிய பாங்கர்கூட்டம் நிகழாமலேயே இடந்தலைப் பாட்டின்பின் வரைந்து கோடலும் உண்டென்பது இதனாற் புலப்படும். |
| சூ. 122 : | அவன்வரம் பிறத்தல் அறந்தனக் கின்மையின் |
| களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும் |
| தான்செலற் குரியவழி யாக லான |
| | |
க - து :
| தாமே தூதுவராகுமிடத்துத் தலைவிக்குரியதோர் இலக்கணம் கூறுகின்றது. |
பொருள் :தலைவன் உறையும் எல்லைக்கண் சென்று சேர்தல் களவின்கண் தலைவிக்கு அறநெறியின்மையான் கூட்டத்திற்குரிய களம் (குறியிடம்) குறித்துக் கூறுதல் தலைவியின்கண்ணதாகும். காரணம் அக்களம் தான் செல்லுதற்குப் பயின்றமைந்த வழி ஆகலான். |
"விரியிணர் வேங்கை" என்னும் அகப்பாட்டுள் "கூஉம் கண்ணதுஎம் ஊர்என ஆங்கதை அறிவுறல் மறந்திசின் யானே" எனக் களஞ்சுட்டும் தன் உரிமையைப் புலப்படுத்தியவாறு கண்டுகொள்க. |
சூ. 123 : | தோழியின் முடியும் இடனுமா ருண்டே |
| (31) |
க - து : | களஞ்சுட்டுதல் தோழிக்கு முரித்தாகும் என்கின்றது. |
பொருள் : தாமே தூதுவராம் நிலை கடந்த தோழியிற் புணர்வின்கண் களஞ்சுட்டுதல் தோழியின் முடிதலும் உண்டு. |
இடம் என்றது பாங்கியாற் கூடும் கூட்டத்தை உணர்த்தி நின்றது. உம்மையான் தோழியிற் புணர்வின்கண்ணும் தலைவி இடஞ்சுட்டுதல் உண்டென்பது பெறப்படும். |
எ - டு : | "செவ்வீ ஞாழற் கருங்கோட் டிருஞ்சினை" |
என்னும் அகப்பாட்டினுள் (240) . . . . வண்டுபட |
| விரிந்த செருந்தி வெண்மணல் முடுக்கர்ப் |
| பூவேய் புன்னையந் தண்பொழில் |
| வாவே தெய்ய மணந்தனை செலற்கே; |
எனத்தோழி களஞ்சுட்டியவாறு காண்க. |