108களவியல்

யும், புனமும்,   கானலும்   ஆகிய   இள   மகளிர்   சென்று விளையாடி
வருதற்குரிய இடங்களாம்.
  

எ - டு :

"பூவேய் புன்னையந் தண்பொழில் 

வாவே தெய்ய மணந்தனை செலற்கே"
 

(அகம்-240)
 

எனவரும்.
 

சூ. 135 :

அல்லகுறிப் படுதலும் அவள்வயின் உரித்தே 

அவன்குறி மயங்கிய அமைவொடு வரினே 

(43)

க - து :

அல்லகுறிப்படுதலும்  அதற்கு  ஏதுவும்  ஆமாறு கூறுகின்றது.
அது       தலைவிக்கோதிய கிளவிகளுள்       "இருவகைக்
குறிப்பிழைப்பாகிய விடத்தும்" என ஓதப்பட்டதாகும்.
 

பொருள் :தான்   குறியிடத்திற்கு   வந்து  சேர்ந்தமையைத் தலைவன்
புலப்படுத்தும்   அடையாளச்   செய்கைகள்     ஒரோவழித் தலைவனான்
நிகழாமல்  இயற்கையாக நிகழ, அதன் உண்மையறியாமல் தலைவன் செய்த
குறியாக   எண்ணி   மயங்கிய   அமைதியான்   வரின்   தலைவியிடத்து
அல்லகுறிப்படுதலும்   உரியதாகும்.      அல்லகுறி =    குறியல்லாதகுறி.
படுதல்=வருந்துதல்.
 

எ - டு :

இருள்வீ நெய்தல் இதழகம் பொருந்திக் 

கழுதுகண் படுக்கும் பானாட் கங்குல் 

எம்மினும் உயவுதி செந்தலை யன்றில் 

கானலஞ் சேர்ப்பன் போல நின்பூ 

நெற்றிச் சேவலும் பொய்த்தன்றோ குறியே
 

(நச்-மேற்)
 

இது தலைவன் குறிபொய்த்தான் என மயங்கியது.
 

இடுமணல் எக்கர் அகன்கானற் சேர்ப்பன் 

      

கடுமான் மணியரவம் என்று - கொடுங்குழை 

புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தான் சிறுகுடியர் 

உள்ளரவம் நாணுவர் என்று 

(ஐந்-எழு-54)

எனவரும். இஃது அல்லகுறி உற்றுமயங்கியது.
  

சூ. 136 :

ஆங்காங் கொழுகும் ஒழுக்கமும் உண்டே 

ஓங்கிய சிறப்பின் ஒருசிறை யான  

(44)
 

க - து :

  

களவின்கண்    தலைவியது  ஒழுகலாறு பற்றியதொரு புறனடை
கூறுகின்றது.
  

பொருள் : களவின்கண்  தலைவிக்குரியவாக   முன்னர்   ஓதப்பெற்ற
கிளவிகளும்   பிற   மரபுகளுமேயன்றி       அவ்வவ்விடங்களுக்கேற்பத்
தலைவன் மாட்டும் தோழி மாட்டும் செவிலி