யும், புனமும், கானலும் ஆகிய இள மகளிர் சென்று விளையாடி வருதற்குரிய இடங்களாம். |
எ - டு : | "பூவேய் புன்னையந் தண்பொழில் |
| வாவே தெய்ய மணந்தனை செலற்கே" | (அகம்-240) |
எனவரும். |
சூ. 135 : | அல்லகுறிப் படுதலும் அவள்வயின் உரித்தே |
| அவன்குறி மயங்கிய அமைவொடு வரினே |
(43)
|
க - து : | அல்லகுறிப்படுதலும் அதற்கு ஏதுவும் ஆமாறு கூறுகின்றது. அது தலைவிக்கோதிய கிளவிகளுள் "இருவகைக் குறிப்பிழைப்பாகிய விடத்தும்" என ஓதப்பட்டதாகும். |
பொருள் :தான் குறியிடத்திற்கு வந்து சேர்ந்தமையைத் தலைவன் புலப்படுத்தும் அடையாளச் செய்கைகள் ஒரோவழித் தலைவனான் நிகழாமல் இயற்கையாக நிகழ, அதன் உண்மையறியாமல் தலைவன் செய்த குறியாக எண்ணி மயங்கிய அமைதியான் வரின் தலைவியிடத்து அல்லகுறிப்படுதலும் உரியதாகும். அல்லகுறி = குறியல்லாதகுறி. படுதல்=வருந்துதல். |
எ - டு : | இருள்வீ நெய்தல் இதழகம் பொருந்திக் |
| கழுதுகண் படுக்கும் பானாட் கங்குல் |
| எம்மினும் உயவுதி செந்தலை யன்றில் |
| கானலஞ் சேர்ப்பன் போல நின்பூ |
| நெற்றிச் சேவலும் பொய்த்தன்றோ குறியே | (நச்-மேற்) |
இது தலைவன் குறிபொய்த்தான் என மயங்கியது. |
| இடுமணல் எக்கர் அகன்கானற் சேர்ப்பன் |
| கடுமான் மணியரவம் என்று - கொடுங்குழை |
| புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தான் சிறுகுடியர் |
| உள்ளரவம் நாணுவர் என்று |
(ஐந்-எழு-54)
|
எனவரும். இஃது அல்லகுறி உற்றுமயங்கியது. |
சூ. 136 : | ஆங்காங் கொழுகும் ஒழுக்கமும் உண்டே |
| ஓங்கிய சிறப்பின் ஒருசிறை யான |
(44) |
க - து :
| களவின்கண் தலைவியது ஒழுகலாறு பற்றியதொரு புறனடை கூறுகின்றது. |
பொருள் : களவின்கண் தலைவிக்குரியவாக முன்னர் ஓதப்பெற்ற கிளவிகளும் பிற மரபுகளுமேயன்றி அவ்வவ்விடங்களுக்கேற்பத் தலைவன் மாட்டும் தோழி மாட்டும் செவிலி |