இருப்பதனைச் சேய்மைக்கண் நின்று கண்டு வந்து தலைவனிடம் கூறுதலே பாங்கனுக்குக் களவியலில் உள்ள தொடர்பாகும். மற்றைய வழியும், சொல்லவட் சார்த்தி புல்லிய வகையினும் - உரை இனிது. 10, 11,12 ஆகிய கிளவிகள் அகனைந்திணைக்கண் கைக்கிளைப்பகுதி 13-17 யாழோர் கூட்டமாகிய ஐந்திணைப்பகுதி 18-22 ஐந்திணைக்கண் நிகழும் பெருந்திணைப்பகுதி என்று இவ்வுரையாளர் குறிப்பிடுவதற்குரிய இயைபுகள் இந்நூற்பாவில் இருப்பனவாகப் புலப்படவில்லை. இப்புதுக்கருத்தை நிலைநிறுத்த மிக விரிவான விளக்கம்வேண்டும். |