"பிறபிற பெண்டிரின்" என்றதனான் உணர்ப்புவயின் தீரா ஊடற்காலத்துத் தலைவன் துனியுற்றுக் கூறுதலும், பல்லாறாக ஊடலுணர்த்தலும் பிறவும் இதன்கண் அடக்கிக் கொள்க. |
18) பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் பரிவு நீக்கிய பகுதிக் கண்ணும் என்பது : தூது முதலாய பிரிவின் கண் குறித்தபருவம் நீட்டித்தவிடத்துத் தனித்தனி வருந்தியிருந்த தலைவியையும் தோழியையும் அவ்வருத்தத்தினின்று நீக்கிய பகுதிக்கண்ணும் என்றவாறு. |
பல்வகையானும் முயன்று தண்ணளி செய்தலின் பரிவு நீக்கிய பகுதிக்கண்ணும் என்றார். எ - டு : வந்துழிக் கண்டு கொள்க. |
பின்னர்க் "காமக்கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்" என்பதனான் ஈண்டு இருவர் என்றது தலைவியையும் காமக்கிழத்தியையும் எனினும் ஒக்கும். தோழி தானே செவிலி மகளே என்பதனான் தாயத்தாய்க் கொண்டொழுகும் மரபானே காமக்கிழத்தியாவாள் ஒன்றித் தோன்றும் தோழி எனக் கொள்க. அஃது ஆளும் மன்னரது குடி வழக்காய்ப் பெரும்பான்மையும் நிகழுமென்க. ஆண்டுக் காமக்கிழத்தியை முற்கூறியதும் அவ்வழக்குப் பற்றியே என்க. |
19) நின்று நனிபிரிவின் அஞ்சியபையுளும் என்பது : பகை முதலாயவற்றைக் கருதி நின்று அப்பிரிவுகளான் ஆற்றாது தலைவி என்படுமோ என மிக அஞ்சிய நோவின் கண்ணும் என்றவாறு, நெடுநாள் நேரும் எனக் கருதி உளம் வருந்தலின் அப்பிரிவுத் துன்பத்தைப் பையுள் என்றார்; |
| எ - டு : | அன்பும் மடனும் சாயலும் இயல்பும் |
| என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும் |
| ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி |
| இன்றே இவண மாகி நாளை |
| புதலிவர் ஆடமை தும்பி குயின்ற |
| அகலா அந்துளை கோடை முகத்தலின் |
| நீர்க்கியங் கினநிரைப் பின்றை வார்கோல் |
| ஆய்க்குழல் பாணியின் ஐதுவந் திசைக்கும் |
| தேக்கமல் சோலைக் கடறோங் கருஞ்சுரத்து |
| யாத்த தூணித் தலைதிறந் தவைபோல் |
| பூத்த இருப்பைக் குழைபொதி குவியிணர் |
| கழல்துளை முத்தின் செந்நிலத் துதிர |
| மழைதுளி மறந்த அங்குடிச் சீறூர்ச் |