| சேக்குவங் கொல்லோ நெஞ்சே பூப்புனை |
| | புயல்என ஒலிவரும் தாழிருங் கூந்தல் |
| செறிதொடி முன்கைநம் காதலி |
| அறிவஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே |
| (அகம் 225) |
எனவரும். |
20) சென்று கையிகந்து பெயர்த்து உள்ளிய வழியும் என்பது = பொருள் முதலிய பிரிவின்கண் செல்வோன் மிகச் சேய்த்தாகச் சென்று அவ்விடத்துத் தலைவியின் நிலைமையை மீண்டும் கருதிய வழியும் என்றவாறு. கையிகந்து சென்று என மாறுக. இஃது இடைச்சுரத்து அழுங்கலாம். |
| எ - டு : | உண்ணா மையின் உயங்கிய மருங்கின் |
| ஆடாப் படிவத்து ஆன்றோர் போல |
| வரைசெறி சிறுநெறி நிரைபுடன் செல்லும் |
| கான யானை கவினழி குன்றம் |
| இரந்துபொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த |
| சில்லைங் கூந்தல் நல்லகம் பொருந்தி |
| ஒழியின் வறுமை அஞ்சுதி அழிதகவு |
| உடைமதி வாழிய நெஞ்சே நிலவென |
| நெய்கனி நெடுவேல் எஃகின் இமைக்கும் |
| மழைமருள் பஃறோல் மாவண் சோழர் |
| கழைமாய் காவிரிக் கடல்மண்டு பெருந்துறை |
| இறவொடு வந்து கோதையொடு பெயரும் |
| பெருங்கடல் ஓதம் போல |
| ஒன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே |
| (அக-123) |
இஃது இடைச்சுரத்தழுங்கும் நெஞ்சிற்குக் கூறியது. பிறவும் இவ்வாறே கண்டு கொள்க. |
21) காமத்தின் வலியும் என்பது : காமத்தின் வலிமையைக் கருதியவிடத்தும் என்றவாறு. |
| எ - டு : | "ஏஎ இவை ஓருயிர்ப் புள்ளின் இருதலையுள் ஒன்று |
| போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ கூறியென் |
| ஆருயிர் நிற்குமாறியாது" |
| (கலி-89) |
என்னும் மருதக்கலியுள் ஆற்றாமை மிகுதியாற் காமத்தின் வலி கூறியவாறு காண்க. |
22) கைவிடின் அச்சமும் என்பது : பொருளீட்டங் கருதி இருதலைப்புள்ளின் ஓருயிரன்ன தலைவியைக் கைவிட்டுப் பிரியின் அவ்வழி அவள் எய்தும் நிலைமைக்கு அஞ்சுதற் கண்ணும் என்றவாறு. |