| எ - டு : | 'அளிநிலை பொறாது' என்னும் அகப்பாட்டினுள் |
| . . . . . . .ஒண்டொடி |
| உழைய மாகவும் இனைவோள் |
| பிழையலள் மாதோ பிரிதுநா மெனினே |
| (அகம்-5) |
என அஞ்சியவாறு காண்க. |
23) தானவட் பிழைத்த நிலையின் கண்ணும் என்பது : களவுக் காலத்து நின்னைப் பிரியேன் பிரியின் தரியேன் என்ற வாய்மையைப் பிழைத்த நிலையை எண்ணுமிடத்தும் என்றவாறு. |
பருவம் பிழைத்தமை பற்றி முன்பு விதித்தமையான் இது சூள் பிழைத்தமை பற்றியது என்பது போதரும். எ - டு : வந்துழிக்கண்டு கொள்க. |
24) உடன் சேறற் செய்கையொடு அன்னவை பிறவும் மடம்பட வந்த தோழிக் கண்ணும் என்பது : இவள் நின்பிரிவை ஆற்றாளாதலின் உடனழைத்துச் செல்க எனக்கூறிச்செயற்படுதலொடு அவைபோல்வன பிறவுமாகக் கூறித் தோழி தன்அறியாமை தோன்றவந்த விடத்தும் என்றவாறு. |
உடன் அழைத்துச் செல்க எனக்கூறி உடன்போதற்கு ஆவனபுரிவாளாய் நிற்றலின் "செய்கையொடு" என்றார். அறிவுடையாளாகிய பாங்கி தலைவியின் துயர் ஒன்றையே கருதி எண்ணரும் பாசறை பெண்ணொடு செல்லுதல் முறைமையன்று என்பதை மறந்து கூறினாளாதலின் "மடம் பட வந்த தோழி" என்றார். |
| எ - டு : | 'பாஅல் அஞ்செவி' என்னும் பாலைக்கலியுள் |
| பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு |
| எந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வது |
| அந்நாள் கொண்டிறக்கும் இவள்அரும் பெறலுயிரே |
| (கலி-5) |
என்றாங்குக் கூறுதல். |
25) வேற்றுநாட் டகல்வயின் விழுமத்தானும் என்பது : நாடிடையிட்ட மொழிபெயர் தேயத்துப் பிரியும் பிரிவிற்கு ஒருப்பட்ட காலை இடும்பை கொள்ளுமிடத்தும் என்றவாறு. |
பகை முதலாய பிரிவினைக் கருதி எய்தும் துன்பம் பற்றி முன்னர் "நின்றநனி பிரிவின் அஞ்சிய பையுளும்" எனக் கூறினமையின் இப்பிரிவு ஓதற்பிரிவென்பது போதரும். பிரிவென வாளா கூறாமல் வேற்று நாட்டு என விதந்தமையானும் அது வலியுறும். |