கற்பியல்131
எ - டு :

"கேள்கே டூன்றவும் கிளைஞர் ஆரவும் 

கேளல் கேளிர் கெழீஇயனர் ஒழுகவும் 

ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல்சிறந்து

ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர் 

அறங்கெழு நல்லவை உறந்தை யன்ன 

பெறலரும் நன்கலம் எய்தி நாடும் 

செயலும் செய்வினை முற்றின மாயின் 

அரண்பல கடந்த முரண்கொள் தானை 

வாடா வேம்பின் வழுதி கூடல் 

நாள்அங் காடி நாறும் நறுநுதல் 

நீளிருங் கூந்தல் மாஅ யோ ளொடு 

வரைகுயின் றன்ன வான்றோய் - நெடுநகர் 

நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை 

நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து 

நலங்கே ழாகம் பூண்வடுப் பொறிப்ப 

முயங்குகம் சென்மோ நெஞ்சே"  

(அகம்-93)
 

இது வினை   முற்றி   மீள்வோன் நெஞ்சிற்குக் கூறியது. சிறப்புப் பெற்றுக்
கூறியவை வந்தவழிக் கண்டு கொள்க.
 

28) பேரிசையூர்திப் பாகர் பாங்கினும் என்பது :  சிறப்பொடு மீள்வோன்
பெரிய புகழையுடையதாகிய தேரினைச் செலுத்தும் பாகரிடத்தும் என்றவாறு.
'பாகர்' எனப் பன்மையாற் கூறினமையின்   இளையோர்பாற்   கூறுவனவும்
கொள்க.
 

எ - டு :

"வந்துவினை முடித்தனன் வேந்தனும், பகைவரும் 

தம்திறை கொடுத்துத் தமர்ஆயினரே 

முரண்செறிந் திருந்த தானை இரண்டும் 

ஒன்றென அறைந்தன பணையே, நின்தேர் 

முன்னியங் கூர்தி பின்னிலை ஈயாது 

ஊர்க பாக ஒருவினை கழிய - "  

(அக-44)
 

இது துணைவேந்தன் வினை முற்றி மீளுங்கால் பாகனிடத்துக் கூறியது.
 

"இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தென 

புரிந்த காதலொடு பெருந்தேர் யானும் 

ஏறியது அறிந்தன் றல்லது வந்த 

ஆறுநனி யறிந்தன்றோ இலனே தாஅய் 

முயற்பறழ் உகளும் முல்லையம் புறவில் 

கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண் 

மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ