| இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே |
| | வான்வழங் கியற்கை வளி பூட் டினையோ |
| மானுரு வாகநின் மனம்பூட் டினையோ |
| உரைமதி வாழியோ வலவ" |
| (அக-384) |
இது தானைத்தலைவன் மனைவந்திறங்கிப் பாகனொடு கூறியது. பிறவும் சான்றோர் செய்யுளுட் கண்டு கொள்க. |
29) காமக்கிழத்தி மனையோள் என்றிருவர் ஏமுறுகிளவி சொல்லிய எதிரும் என்பது : தலைவியொடு ஓரில்லத்து உடன் வதியும் காமக்கிழத்தி மகன்றாயாகிய இற்கிழத்தி என்று கூறப்படும் இருவர் சொல்லிய வருத்தமைந்த உரைகளை ஏற்று மறுமொழி கூறுமிடத்தும் என்றவாறு. |
ஏறுமுறுகிளவி என்றது பிரிந்து செல்வுழிச் சுரத்து வருந்தினிர் கொல் எனவும், எம்மை நினைத்திரோ எனவும் பிறவுமாகப் பரிவுற்றுக் கூறுவனவாம். இற்பிறப்புக் காரணமாக மனைவி விரைந்து உரையாளாதலின் காமக்கிழத்தி அவள் கருத்தையும் உள்ளடக்கி முனைந்து கூறும் ஆதலின் காமக்கிழத்தியை முற்கூறினார் என்க. |
| எ - டு : | எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடை |
| அரிய வாயினும் எளிய வன்றே |
| அவவுறு நெஞ்சம் கவவுநனி விரும்பி |
| கடுமாண் திண்டேர் கடைஇ |
| நெடுமான் நோக்கிநின் உள்ளியாம் வரவே |
| (ஐங்-360) |
இஃது இருவர்க்கும் ஒப்பக் கூறியது. |
"தொடங்கு வினைதவிரா" என்னும் அகப்பாட்டுத் (அக-29) தலைவியிடத்துக் கூறியது. |
30) சென்ற தேஎத்து உழப்புநனி விளக்கி இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும் என்பது : அங்ஙனப் பரிவுற்றுக் கூறிய இருவர் பாலும் தான் சென்ற நாட்டகத்துத் தனக்கு நேர்ந்த வருத்தத்தை மிகவும் விளங்கச் சொல்லித் தலைவியின்றித் தனித்துச் சென்றமையான உற்ற நிலைமையினைக் கிளந்து கூறுமிடத்தும் என்றவாறு. எ-டு: வந்தவழிக் கண்டு கொள்க. |
31) அருந்தொழில் முடித்த செம்மற்காலை விருந்தொடு நல்லவை வேண்டற்கண்ணும் என்பது : செயற்கரியவாய வினை |