கற்பியல்135
      

உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் 

பெருமையின் திரியா அன்பின் கண்ணும் 

கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலின் 

அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் 

இன்பமும் இடும்பையும் ஆகிய விடத்தும் 

கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி 

நயந்த கிழவனை நெஞ்சுபுண் ணுறீஇ 

நளியின் நீங்கிய இளிவரு நிலையும் 

புகன்ற உள்ளமொடு புதுவோர்ச் சாயற்கு 

அகன்ற கிழவனை புலம்புநனி காட்டி 

இயன்ற நெஞ்சம் தலைப்பெயர்த் தருக்கி 

எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்.

தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி 

எங்கையர்க் குரையென இரத்தற் கண்ணும் 

செல்லாக் காலைக் செல்கென விடுத்தலும் 

காமக் கிழத்தி தன்மகத் தழீஇ 

ஏமுறு விளையாட் டிறுதிக் கண்ணும் 

சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி 

அறம்புரி நெஞ்சமொடு தன்வர வறியாமை 

புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானும் 

தந்தையர் ஒப்பர் மக்களென் றதனான் 

அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும் 

கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது 

நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் 

பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும் 

கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி 

அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக்

காதல் எங்கையர் காணின் நன்றென 

மாதர் சான்ற வகையின் கண்ணும் 

தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை 

மாயப் பரத்தை உள்ளிய வழியும் 

தன்வயிற் சிறப்பினும் அவன்வயிற் பிரிப்பினும் 

இன்னாத் தொல்சூள் எடுத்தற் கண்ணும் 

காமக் கிழத்தியர் நலம் பாராட்டிய