| | உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் |
| பெருமையின் திரியா அன்பின் கண்ணும் |
| கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலின் |
| அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் |
| இன்பமும் இடும்பையும் ஆகிய விடத்தும் |
| கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி |
| நயந்த கிழவனை நெஞ்சுபுண் ணுறீஇ |
| நளியின் நீங்கிய இளிவரு நிலையும் |
| புகன்ற உள்ளமொடு புதுவோர்ச் சாயற்கு |
| அகன்ற கிழவனை புலம்புநனி காட்டி |
| இயன்ற நெஞ்சம் தலைப்பெயர்த் தருக்கி |
| எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும். |
| தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி |
| எங்கையர்க் குரையென இரத்தற் கண்ணும் |
| செல்லாக் காலைக் செல்கென விடுத்தலும் |
| காமக் கிழத்தி தன்மகத் தழீஇ |
| ஏமுறு விளையாட் டிறுதிக் கண்ணும் |
| சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி |
| அறம்புரி நெஞ்சமொடு தன்வர வறியாமை |
| புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானும் |
| தந்தையர் ஒப்பர் மக்களென் றதனான் |
| அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும் |
| கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது |
| நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் |
| பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும் |
| கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி |
| அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் |
| காதல் எங்கையர் காணின் நன்றென |
| மாதர் சான்ற வகையின் கண்ணும் |
| தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை |
| மாயப் பரத்தை உள்ளிய வழியும் |
| தன்வயிற் சிறப்பினும் அவன்வயிற் பிரிப்பினும் |
| இன்னாத் தொல்சூள் எடுத்தற் கண்ணும் |
| காமக் கிழத்தியர் நலம் பாராட்டிய |