புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் |
உண்என்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர் |
முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற்று |
அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர் |
பரிமலிந் தொழியப் பந்த ரோடி |
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி |
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் |
கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக் |
கொடுத்த தாதைக் கொடுஞ்சோ றுள்ளாள் |
ஒழுகுநீர் நுணங்கறல் போலப் |
பொழுது மறுத்துண்ணும் சிறுமது கையளே |
(நற்-110) |
இது தலைவி மனையறங் கண்டு மருண்டு கூறியது. |
சூ. 156 : | சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய |
(13) |
க - து : | கற்பின்கண் அறிவர் கூற்று நிகழுமாறு கூறுகின்றது. |
பொருள் : மேற்கூறிய கிளவிகள் செவிலிக்கேயன்றி அறிவர்க்கும் உரியவாகும். |
எ - டு : | தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற |
| சொற்காத்துச் சோர்விலாள் பெண் |
(குறள்-55) |
| மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் |
| வளத்தக்காள் வாழ்க்கைத் துணை |
(குறள்-51) |
இவை நல்லவை யுரைத்தல். |
எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை |
அட்டிற் புகாதாள் அரும்பிணி - அட்டதனை |
உண்டி உதவாதாள் இல்வாழ்யேய் இம்மூவர் |
கொண்டானைக் கொல்லும் படை |
(நாலடி-363) |
இஃது அல்லவை கடிதல். |
| சூ. 157 : | இடித்துவரை நிறுத்தலும் அவர தாகும் |
| கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின் |
(14) |
க - து : | அறிவர் கூற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. |
பொருள் : மனையறக்கிழமை பூண்ட தலைவனும் தலைவியும் அவ் அறிவர் வகுத்த நெறியை வரம்பாகக் கோடலின் அந்நெறியை அவர் வழுவிய காலை இடித்துரைத்து அவ் எல்லைக்கண் நிறுத்தலும் அறிவரது கடமையாகும். |