பொருள் : தலைவன் பரத்தமை ஒழுக்கத்தை இனி மேவாது மறுத்தலை வேண்டுதலானும், தலைவி அவன் புறத்தொழுக்கினை அறிந்திருந்தும் அதனைப் பொறுத்தாற்றும் பெண்மைக் குணமாகிய மடப்பத்தை உரிமையாகக் கொண்டொழுகுதலானும் சொலத்தகு கிளவியேயன்றி அன்பிலை கொடியை எனத் தலைவனைக் கூறுதற்கும் தோழி உரியளாவாள். |
பணிமொழியேயன்றி இங்ஙனம் முனிந்து கூறற்கும் உரியள் என உம்மை இறந்தது தழீஇநின்றது. |
| எ - டு : | "கண்டவரில் எனும்" நெய்தற்கலியுள் | (125) |
| அன்பிலை எனவந்து கழறுவல் ஐயகேள் |
| மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூழ் இளமுலை |
| முகிழ்செய முள்கிய தொடர்பவள் உண்கண் |
| அவிழ்பனி உறைப்பவும் நல்காது விடுவாய் |
| இமிழ்திரைக் கொண்க கொடியை காண்நீ" |
என மிகைத்துக் கூறியவாறு கண்டு கொள்க. |
| சூ. 161 : | அவன்குறிப் பறிதல் வேண்டியும் கிழவி |
| அகமலி ஊடல் அகற்சிக் கண்ணும் |
| வேற்றுமைக் கிளவி தோற்றவும் படுமே |
(18) |
க - து : | ஊடற்காலத்து நிகழ்த்தும் தலைவி கூற்றிற்குரியதோர் இயல்பு கூறுகின்றது. |
பொருள் : தலைவனது உள்ளக்குறிப்பினை அறிய வேண்டிய விடத்தும் தன் மனத்தே நிறைந்து நின்ற ஊடல் நீங்குதலைச் செய்யுமிடத்தும் தலைவற்குத்தான் வேறாயவள் போல அயன்மைப்படுத்துங் கூற்றினைத் தலைவி தோற்றுவிக்கவும் பெறும். |
| எ - டு : | யாரைநீ எம்மிற் புகுதர்வாய், ஓரும் |
| புதுவமலர் தேரும் வண்டேபோல் யாழ |
| வதுவை விழவணி வைகலும்காட்டினையாய் |
| மாட்டுமாட்டு ஓடி மகளிர் தரத்தர |
| பூட்டுமான் திண்டேர் புடைத்தமறுகெல்லாம் |
| பாட்டாதல் சான்ற நின்மாயப் பரத்தைமை |
| காட்டிய வந்தெமைக் கைப்படுத்தேன் பண்டெலாம் |
| கேட்டும் அறிவேன் மன்யான்" |
(கலி-98) |
இதன்கண் 'யாரை நீ' என அயன்மைப்படுத்தியவாறு காண்க. |